பக்கம் எண் :

32மனோஹரன்[அங்கம்-1

இல்லாவிட்டால் ஒன்றும் எனக்கு வேண்டாம். ஜெயம்
பெற்றுவந்த மனோஹரன், தன்னைப் பெற்ற தாயார்
கேட்கும்படியான ஒருவரத்தைக் கொடுக்க அசக்தனானா
னெனப் பலர் நகைப்பார்கள் நாளை ;  இந்தப் பழிச்
சொல்லைப் பெற உனக்கு விருப்பமானால் உன்னிஷ்டப்
படிச் செய்.

ம. ஐயோ !  அப்படி ஒன்றுமில்லை யம்மணி !  நீர் கேட்பதை
நான் மறுப்பேனோ? ஆயினும் எதற்காக இப்படிப்பிரமாணம்
செய்யும்படி கேட்கிறீர்?

ப.

காலம்வரும்பொழுது நியாயம் கூறுகிறேன். இப்பொ
ழுது என் சொற்படி செய்கிறாயா மாட்டாயா?

ம.  அப்படியே ஆகட்டும், அம்மணி.  [ சத்தியம் செய்கிறான். ] 

ப. சத்தியசீலரே, ராஜப்பிரியா, விஜயா, நீங்களெல்லோரும்
சாட்சி-மனோஹரா, இதை மறவாதே.

வி. பிராணநாதா, எனக்கொரு வரம்வேண்டும்.

ம. சரி !  உனக்கென்னவரம் வேண்டும்? நானினி யுத்தத்திற்
கே போகலாகாதெனக் கேட்டுவிடு. பிறகு அரண்மனை
யில் அந்தப்புரத்தில் உட்கார்ந்துகொண்டு கழலாடிக்
கொண்டிருக்கிறேன்.

வி. அப்படி யில்லை, பிராணநாதா. இனி, என்னிடங் கூறிய
படியே எப்பொழுதும் நடக்கிறதாக வாக்களியும்.

ம. என்ன அப்படி நான் நடவாமற்போன திதுவரையில்?

வி. இன்றைத்தினம் வருவதாகக் கூறிவிட்டு நாளைத்தினம்
வரப் பார்த்தீரே ! 

ம. ஓஹோ ! வாஸ்தவந்தான். என் சொற்படி நடவாதிருந்
தேனாயின் என்னென்ன தீமைகள் நேர்ந்திருக்கும் !  இதி
னின்றும் ராஜப்பிரியன் தான் காப்பாற்றினான்.

ரா. அம்மா, உங்களுக்கு சமாசாரம் தெரியாதோ? ஐஐயோ ! 
நான் பலவந்தப்படுத்தி யல்லவோ அழைத்துக்கொண்டு
வந்தேன். அங்கே ஒரு ஸ்திரீயைக் கலியாணம் பண்