பக்கம் எண் :

காட்சி-4]மனோஹரன்33

ணிக்கொண்டு அவ்விடத்தை விட்டு வர மனமில்லாம
லல்லவோ இருந்தார். சமாசாரந் தெரியாதோ?

வி. என்ன பிராணநாதா?

ம.

இதென்ன ராஜப்பிரியா?

வி. இருக்கு மிருக்கும் !  அவர் பொய் பேசுவாரோ?
                   [முகத்தை முன்தானையால் மூடிக்
                      கொள்ளுகிறாள். ]  

ம. அடடே !  ராஜப்பிரியா !  என்ன எப்பொழுது பார்த்தா
லும் நம்மைச் சங்கடத்திலேயே கொண்டுவந்துவிடுகிறாய் !
சீசீ !  விளையாடாதே, அதோ பார்!  விஜயாள் அழத்
தொடங்குகிறாள் !-கண்ணே, விஜயா !  அப்படி யொன்று
மில்லை.

         ராகம்- நாயகி. தாளம்-ரூபகம்.

               கண்ணிகள்.
ம.        ஈதுனக்குத் தகுமோ கண்ணே
         ஏதுகுற்றம் செய்தேன் பெண்ணே
       தீது ஒன்றும் செய்தறியேன்
         தெள்ளமுதே நீயே பாராய்.

வி.        மறந்தீரோ நாதா நீரும்
         மாதுநான் என்பதைத் தேரும்
       பிறந்தேனோ நானிக்கதிக்கு
         பேதைமடி யேனோ இன்றே.

ம.        கோபமென்மேல் ஏனோ மானே
         கூறுவாய் எந்தன் தேனே
       பாபமென்ன செய்தேனோ நான்
         பகருவாய் இன்றே நீதான்.

வி.        உற்று உமைப்பெற்ற சுகம்
         சற்றே சொலும் கற்று நீரே
         5