பக்கம் எண் :

34மனோஹரன்[அங்கம்-1

        பற்றென் பதைப்பெற் றறியேன்
          பகருவதென்னே நான்தான்.

உம்-உம்-இருக்கும் !  இருக்கும் ! 

ம. ராஜப்பிரியா !  சீ !  உண்மையைக் கூறு ! 

ரா.

ஒன்று மில்லை யம்மா. தாம் வருந்தவேண்டாம். வேடிக்
கையாக, வீரலட்சுமியை மணந்தாரெனக் கூறினேன்,
அந்தச் சக்களத்தி உமக்கு ஒரு தீங்குஞ் செய்யமாட்
டாள் !  வருந்தவேண்டாம். [எல்லோரும் நகைக்கிறார்கள்.] 

ம. ராஜப்பிரியா, ஆகட்டும், உனக்கும் விவாக மாகட்டும்
உன்னை என்னபாடு படுத்துகிறேன் பார் ! 

ரா. என்னையா? நான் கலியாணஞ் செய்துகொள்ளுங் காலத்
தில் பார்த்துக்கொள்வோம் ;  உம்மைப் போலவா நான்?
மையிட்ட கண்ணினின்றும் தண்ணீர் வந்தால் உமது
வீரமெல்லாம் எங்கேயோ மறைந்து போய்விடுகிறதே?
இல்லா விட்டால் முத்துவிஜயபாண்டியன் மருமகள்
காலில் வீழ்ந்தழுதாளென்று, சத்ருவின் குமாரன் என்
றும் பாராமல், குலசேகரபாண்டியனுக்குப் பட்டங்
கட்டிவிட்டு வருவீரா நீர்?

ப. கண்ணே, அப்படியா செய்தாய்? மிகவும் சந்தோஷம்.
அதுதான் சுத்தவீரனுக்கு லட்க்ஷணம் !  பகைவரைப்
பொறுப்பதே மேன்மை.

ரா. சரி, அவருடைய அன்னையல்லவா தாங்கள் !  என்னஅப்பா
இப்படிப்பகைவருடன் உறவாடலாமா என்று கண்
டிப்பதைவிட்டு, சபாஷ் என்று தட்டிக்கொடுக்கிறீர்களே ! 

ம. ராஜப்பிரியா, முத்துவிஜயன்தான் நமக்கு விரோதி,
அவன் குமாரன் நமக்கொரு கெடுதியும் செய்ய
வில்லையே, அவனையும் ஏன் தண்டிக்க வேண்டும்?

ரா. இப்பொழுது ஒரு கெடுதியும் செய்யவில்லை. இனிமேல்
செய்யப்போகிறான். இப்பொழுதே சொன்னேன் பா
ரும், பாம்பின் வயிற்றில் பாம்புதான் பிறக்கும்.