பக்கம் எண் :

காட்சி-1]மனோஹரன்37

நல்ல வெகுமானம் குடுத்து வீட்டுக் கனுப்பிச்சுடணும்
இல்லாப்போனா அவர் கொடுக்கர மருந்தெ, அவரே
திண்ணுட கட்டளெ யிடுங்க.

பு.

ஸ் !  விகடா என்ன செய்கிறாய் அங்கே? வசந்தனைப்
பேசாமலிருக்கும்படிப் பார்த்துக்கொள்.

வன்.

சந்தேக மில்லை மகாராஜா ! 

விக.

ஆமாம் கொஞ்சங்கூட சந்தேகமில்லை, உக்காருங்கையா ! 
                     [இழுத்து உட்காரவைக்கிறான். ] 


           ஓர் சேவகன் வருகிறான்.

சே.

பராக் !  மந்திரி சத்தியசீலர் அவர்கள் குரு மகாராஜாவை
அழைத்துக்கொண்டு வருகிறார்.
                     [மஹாராஜா சபையுடன் எழுந்து
                       நிற்கிறார். ] 


        குரு சத்தியசீலருடன் வருகிறார்.

பு.

குருசுவாமி, நமஸ்காரம்- வரவேண்டும், வரவேண்டும்.
                     [நமஸ்கரிக்க குரு ஆசீர்வதிக்கிறார். ] 

தாங்கள் இப்படி எழுந்தருளவேண்டும்.
                     [குரு உட்கார எல்லோரும்
                       உட்காருகிறார்கள். ] 

குரு.

புருஷோத்தமா, எல்லாம் க்ஷேமந்தானா?

பு.

தங்களுடைய கிருபா நோக்கத்தால் எல்லாம் க்ஷேமந்
தான்.

குரு.

உன் மகன் மனோஹரனுடைய வெற்றியைக்கேட்டு மிக
வும் சந்தோஷப்பட்டோம், சிரஞ்சீவியாக வாழ்வானாக ! 
அவனைப் பார்த்து ஆசீர்வதித்துப் போகவே இங்
கெழுந்தருளினோம். பத்மாவதியின் மகன் சுத்தவீரனானது
ஓராச்சரியமன்று ! -புருஷோத்தமா, உன் பக்கலி
லிருப்பது பத்மாவதி யல்லவா?