பக்கம் எண் :

40மனோஹரன்[அங்கம்-2

குரு.

[ஆசிர்வதித்து ]  பாண்டிய கோளரியாகிய மனோஹரா !  உல
கெங்கும் உனது புகழ் பரவ இப்புவியனைத்தும் ஒரு
தனிக் குடைக்கீழ் ஆளும் சக்ரவர்த்தி யாவாயாக ! 
                     [ மனோஹரன் சிங்காதனத்திற்கு
                     இன்னும் அருகிற் செல்ல, வசந்
                     தசேனை அதன்மீது வீற்றிருப்
                     பதைக் கண்ணுற்று கோபாவே
                     சத்துடன் வாளைவீசப் போக,
                     சபையோரெல்லாம் நடுநடுங்கி
                     "பொறும்! பொறும் !", எனக்
                     கூவுகின்றனர். ] 

குரு.

மனோஹரா ! வேண்டாம் !  வேண்டாம் !  இது நியாய
மன்று பொறு !  பொறு ! 

சத்.

 [ மனோஹரன் காதில் ]  அரசே, தம்முடைய தாயாருக்குக்
கூறியதை மறவாதீர் !
                     [ மனோஹரன் க்ஷண நேரம் அசை
                     வற்று நின்று பிறகு தன் வாளை
                     உரையி லிட்டுத் தலை குனிந்த
                     வண்ணம் சபையை விட்டுச்
                     சரேலெனப் போகிறான் ;  சபை
                     யில் பெருங் கூச்சல் உண்டாகிறது. ] 

குரு.

புருஷோத்தமா !  நான் முன்னமே கூறினேனே, கேட்ட
னையா? இதனால் இப்பொழுது என்ன கோலாகலம்
நேரிடப் போகிறதோ தெரியாது. இந்நேரம் நீயும் உன்
பக்கலிலிருக்கிறவளும் இறக்க விருந்தீர்கள் !  நான்
தடுத்தபடி யாலன்றோ மனோஹரன் சற்று கோபம்
தணிந்து சென்றான் !  அவன் முனிந்தால் மூவுலகும்
பொடியாய் விடும், ஜாக்கிரதை !  இப்பொழுதே சொன்
னேன். இனியாவது என்சொற்படிகேட்டு மனோஹர
னைச் சாந்தப்படுத்தினால் நீ இன்னும் கொஞ்ச காலம்
சுகமாய் வாழலாம். இல்லாவிடின் உனது நாசகாலம்
சீக்கிரத்திற் கிட்டியதென நினை ;  சுத்தவீரனாகிய மனோ
ஹரன் சத்தியத்திற்குட்பட்டவன், ஆகவே பிதாவா
யிற்றேயென்று பார்த்தான்போலும். அவன் வாளா
சென்றானே என்று நினையாதே ;  உனது பகைவரை வெற்றி