பக்கம் எண் :

காட்சி-2]மனோஹரன்41

கொண்டு மீண்ட சத்தியவானாகிய உன்மைந்தன்
கண்ணினின்றும் ஓர் நீர்த்துளி விழுமாயின், அது
உனது ராஜ்யத்தை யெல்லாம் க்ஷணப் பொழுதில் பஸ்
மீகரப்படுத்தும் ஆலகால விஷமென எண்ணுவாய் ! 
என்ன சொல்லுகிறாய் இப்பொழுதாவது?-சரி, குல
குருவாகிய என் கடனை ஒழித்துவிட்டேன். இனி உன்
தலைவிதி !  உனது விநாசகாலத்திற்கே உனக்கு இவ்வித
விபரீத புத்தி தோற்றுகிறது !  நான் இனிமேல் இங்கி
ருப்பது நியாய மன்று. நான் போகிறேன்.

சத்.

சுவாமி, தாங்களிவ்வாறு கோபித்துச் செல்லலாகாது-

குரு.

சத்தியசீலா ! என்னிடம் நீ பேசுவதிற் பயனில்லை, உன்
அரசனுக்குப் புத்திகூறு, போ ! 
                    [கோபத்துடன் போகிறார். சபை
                      யில் மறுபடியும் ஆரவாரம் உண்
                      டாகிறது. ] 

                 காட்சி முடிகிறது.


              இரண்டாவது காட்சி


இடம் :-  அரண்மனை நந்தவனம். காலம் :- மாலை.

  வசந்தன் தலைமுழுவதும் புஷ்பச் சரங்கள் தொங்க உடல் எல்லாம்
   மஞ்சள் நீரால் நனைக்கப்பட்டு அலங்கோலமாய் ஓடிவருகிறான்.

வன்.

ஆ !  சந்தேகமில்லை !  சந்தேகமில்லை !  இதான்சரியான
எடம்.
         [ஓர் கல்லாசனத்தின் கீழ் மறைந்து கொள்கிறான்.] 
            பத்மாவதிதேவி மெல்ல வருகிறாள்.

ப.

கொடுத்துவைத்தவர்கள் அனுபவிக்கிறார்கள். அவர்
களைப் பார்த்து நான் பொறாமைப்படலாகாது.- இங்குச்
சற்று உட்காருவோம் ;  இங்கொருவரும் வரமாட்டார்
       6