|
|
வயிற்றிற்
பிறந்த கொடுமையோ அது?-ஈசனே ! ஈசனே !
நான் எவ்வளவுதான் பொறுப்பேன்?-
[கண்ணீர்
விடுகிறாள்.]
மனோஹரன் பின்புறமாக மெல்லவந்து பத்மாவதி
அருகில்
உட்காருகிறான்.
|
| ப.
|
கண்ணே ! மனோஹரா ! எங்கே இதுவரையில் உன்னை
அரண்மனையிற் காணோம், நான் எங்கும் சுற்றிப்பார்
தேனே?
|
| ம.
|
நானும் உம்மைத் தேடி அரண்மனை யெங்கும் சற்று
முன்பாகச் சுற்றி வந்தேன்.
|
| ப.
|
என்ன சமாசாரம்? ஏதாவது முக்கியமுண்டோ?-என்ன
நீ சற்று முன்பாக அழுதுகொண்டிருந்தாற்போ லிருக்
கிறதே?
|
| ம.
|
அம்மா, என்னை மன்னிக்கவேண்டும். நானும் உங்களை
அதே கேள்வி கேட்க வாயைத்திறந்தேன்- அம்மணி,
என்ன சமாசாரம்?
|
| ப.
|
மனோஹரா, ஏன் என்னிடம் ஒளிக்க முயலுகிறாய்? இன்
றைத்தினம் காலை கொலு மண்டபத்தில் நடந்த விர்த்
தாந்தமெல்லாம் தெரியும் எனக்கு.
|
| ம.
|
யார் சொன்னது?
|
| ப.
|
யார் சொன்னாலுமென்ன?-சத்தியசீலர் சொன்னார்-
கண்ணே, அது என் தலைவிதி, அதற்காக நீ வருத்தப்
படுவானேன்?
|
| ம. | அம்மணி, நான் எவ்வாறு பொறுப்பேனிதை? உமக்குப் பணிப்பெண்ணாயிருந்த அந்த வசந்தசேனை, மஹாராஜா வின் அருகில், நான் தமக்காகக் கொணர்ந்த சிங்காதனத் தில், நீர் உட்கார்ந்திருக்கவேண்டிய ஸ்தானத்தில் உட் கார்ந்திருப்பதைக் கண்டும் நான் பொறுத்திருக்க வேண் டியதாயிற்றே ! அம்மணீ ! வீணில் என் கையைக் கட்டி விட்டீரே ! அதை நான் என் கண்ணாக் கண்டு எவ்வாறு
|