பக்கம் எண் :

காட்சி-4]மனோஹரன்57

தியசீலருக்கும் கொடுத்துவிடு. மஹாராஜாவுக்குக்கொடுக்
கும்பொழுது வேறொருவரு மில்லாத சமயம் பார்த்துக்
கொடு. இதில் ஒன்றும் தவறில்லை. ஆயினும் ஒருவரு
மறியாதபடி கொடு, தெரியுமா?

நீ.

அம்மணி, அப்படியே செய்கிறேன். தங்களுடைய வார்த்
தைக்குக் குறுக்குண்டோ? எப்படியாவது மஹாராஜா
வும் தாங்களும் ஒருமைப்பட்டுச் சுகமாய் வாழ்ந்தாற்
போது மெனக்கு,

ப.

நீலவேணி, அப்படி ஒன்றுமில்லை. இதுவேறு சமாசாரம்.
நான் சொன்னபடி செய், போ சீக்கிரம்.

நீ.

அப்படியே ஆகட்டும், அம்மா.         [போகிறாள்.] 

ப.

நாமினி போவோம் வா.             [போகிறார்கள்.] 

காட்சி முடிகிறது.
 
நான்காவது காட்சி


இடம் :- அரண்மனையில் ஒரு மூலை.

காலம்-காலை.

விகடன் தள்ளாடிக்கொண்டு வருகிறான்.

விக.

இதென்னமோ சமாசாரம் தெரியலே? என்னமோலேகி
யம் தித்தீச்சிக்கினு இருந்துதுண்ணு எடுத்து சாப்பிட்
டுட்டேன் வயித்தியர். பொட்டியிலே யிருந்து, அது
நம்மெ தள்ளுது. பூர்ணாதி லேக்யம்-நல்ல லேக்யம் ! 
                            [கீழே விழுகிறான். ] 

            வசந்தன் ஓடி வருகிறான்.

வ.

ஐயா ! ஐயா !  விகடரே !  எழ்ந்திருங்கையா ! 

விக.

எங்கே?-லேக்கியம் ! 

       8