பக்கம் எண் :

58மனோஹரன்[அங்கம்-2

வ.

இங்கே வயித்தியரு வந்து கேட்டா, நானு இங்கே
இல்லே இண்ணு சொல்லிடுங்கோ-தெரியுமா? சந்தேக
மில்லை நானு இங்கே ஒளிசிக்கிறே ! 
               [மூலையில் ஒளிந்துகொள்கிறான். ] 

விக.

சர்தான், சர்தான்- ரொம்ப நண்ணா இருக்குது லேக்யம் ! 

          அமிர்தகேசரி வருகிறான்.

அ.

எங்கே காணோம்? இங்கேதான் ஓடி வந்தாற்போலிருக்
கிறது. இதோ, விகடர் படுத்திருக்கிறார். இவரைக்
கேட்போம்- ஐயா, விகடரே,-

விக.

லேக்யம் !  லேக்யம் !  - 

அ.

என்ன லேக்யம் !  ஐயா, சற்றெழுந்திருமையா !  பகற்
பொழுதில் தூங்கலாகாதென்று தன்வந்திரி கௌசிகர்
கலைக்கோட்டுமுனி முதலிய பெரியோர்கள் வயித்திய
சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறார்களையா ;  எழுந்திரும்,
இதென்ன தூக்கம்?

விக.

அல்லாம் பூர்ணாதி லேக்யந்தா, போங்கையா ! 

அ.

பூரணாதி லேகியந்தானா !  என்ன விளையாடுகிறீர்? வசந்தர்
எங்கே பார்த்தீரா?

விக.

என்னாயா தொந்தரவு பண்ரிங்கோ? என்னையா வோ
ணும்?

அ.

வசந்தர் எங்கே?

விக.

அல்லாம் அந்த வயித்தியரு பொட்டியிலே யிருக்கும்,
போயி நீங்களும் சாப்பிட்டுவாங்க.

அ.

ஓஹோ !  நம்முடைய பெட்டியிலிருந்து பூரணாதி லேகி
யத்தைத் திருடிச் சாப்பிட்டுவிட்டு மயங்கிக்கிடக்கிறார்
போலிருக்கிறது ! -ஐயா விகடரே, அது போனாற்போ
கிறது, வசந்தர் எங்கே?

விக.

வசந்தனா? அதோ அங்கே இல்லே, போயி பாத்துக்
குங்கோ வேணுமிண்ணா !  [ மறுபடியும் படுத்துக்கொள்கிறான். ]