பக்கம் எண் :

காட்சி-4]மனோஹரன்59

அ.

இதென்ன கஷ்டம் !  அங்கே போய்ப் பார்ப்போ மெதற்
கும்.

வ.

[ மூலையிலிருந்து ] ஐயா !  விகடரே ! அந்த வயித்தியரு
வந்தா இல்லேயிண்ணு சொல்லிடுங்கோ, தெரியுமா?

அ.

ஓ ! ஆசாமி உள்ளே யிருக்கிறார்- வாருமையா வெளியே.

வ.

வரட்டுமா?

அ.

வாரும்.

வ.

[ வெளியே வந்து ] ஏ ! நீங்களா?

அ.

நான்தான், தயவு செய்து இந்த மருந்தைச் சாப்பிட்டு
விடுங்கள்.

வ.

அதிருக்கட்டுமையா ! - ஐயா விகடரே !  நீங்கதானே
என்னெ காம்பிச்சி குடுத்திங்கோ !  சந்தேகமில்லை !

அ.

கொஞ்சம் மருந்தைப் புசித்துவிடுங்கள்.

வ.

இவரெ கேக்காதே நானு மருந்து சாப்பிடமாட்டே-
ஐயா, விகடரே, இந்த மருந்து சாப்பிடலாமா?

விக.

என்னா மருந்து, லேக்யமா?

அ.

அவர் மயக்கமாய்க் கிடக்கிறார், அவரைக் கேட்பதில்
பிரயோஜன மில்லை, ஐயா.

வ.

என்ன மருந்து? சொல்லுங்க ஐயா- ஓகோ !  என்ன
மானாவெஷங் கொடுத்துக் கொண்ணுடப் பாக்கறிங்க
ளோ? வயித்தியரே !  பயித்தரெ அஞ்சி, பத்திரம் ! 

அ.

ஈசனே !  ஜகதீசனே ! -இது நெல்லிக்கனி லேகியம்.

வ.

ஐயா, விகடரே, நெல்லிக் கண்ணி லேக்கியமாம், சாப்
பிடலாமா?

விக.

சீசீ !  அதெல்லாம் ஒதவாத், பூர்ணாதி லேக்யம் சாப்
பிடுங்கோ. பலே சொகுசு !  [ மறுபடியும் கீழே விழுகிறான்.] 

வ.

ஐயா, இது வாணாம் ;  பூர்ணாதி லேக்யம் கொடுத்தா
கொடுங்கோ, இது வாணாம்.