பக்கம் எண் :

60மனோஹரன்[அங்கம்-2

அ.

ஐயோ !  பூரணாதியா? அதைச் சாப்பிட்டுவிட்டுதான்
மயக்கம் பிடித்துக் கிடக்கிறாரே இவர், தெரியவில்லை
யா, வேண்டாமையா, இதைப் புசியும்.

வ.

இது வாணாம், பூர்ணாதிதான் வேணும். சந்தேகமில்லை ! 
சந்தேகமில்லை ! 
                 [ ஒருவரை யொருவர் சுற்றி யோடி
                     முடிவில் இருவருமாக விகடன்
                     பேரில் விழ, விகடன் எழுந்தி
                     ருந்து இருவரையும் கெட்டியா
                     கப்பிடித்துக்கொண்டு கூச்சலிடு
                     கிறான்.] 

           வசந்தசேனை வருகிறாள்.

வனை.

இதென்ன ! மஹாராஜா இருக்கு மிடத் தருகில் இவ்
வளவு கூச்சலென்ன? இங்கு யாரும் காவலாளிக
ளில்லையா? உங்களுக் கென்ன வேலை இங்கே? போங்
கள் வெளியே !

                  [வசந்தன் ஒருபுறமாக ஓடிப்போ
                     கிறான். ] 

விக.

அண்ணாத்தே, நம்மே தூக்கிக்கினு போங்க, அண்ணாத்தே !
                  [அமிர்தகேசரியைக் கெட்டியாகப்
                     பிடித்துக்கொள்ள அமிர்தகேசரி
                     அவனை மெல்ல அழைத்துச்
                     செல்கிறான். ] 

வனை.

[ ஆசனத்தில் உட்கார்ந்துகொண்டு. ]  எனக் கின்னது செய்கிற
தென்று தோன்றவில்லை ஒருபுறம், உடனே மஹாராஜா
வைப் போய்ப் பார்க்கலாமா வென்று தோற்றுகிறது ; 
ஒருபுறம் பார்க்கலாகாது என்று தோற்றுகிறது. இப்
பொழுது பார்த்தால் ஒருவேளை என்னைக் கண்டதும்
கோபம் முன்னிலும் அதிகரிக்குமோ என்னவோ? பாரா
விட்டாலோ, அப்படியே இவரது மனம் திரும்பாது
நிலைத்துவிட்டால் என் செய்வது? எப்படிப் பார்த்த
போதிலும் கஷ்டந்தான் !  என்ன செய்வது?