பு.
|
நீலவேணி ! கொடு இப்படி அந் நிருபத்தை !
|
நீ.
|
மஹாராஜா ! எனதுயிர் போனாலும் நான் கொடுக்கமாட்
டேன் ! என்னை மன்னிக்க வேண்டும். என்னை இதுவரை
யில் காத்து ரக்ஷித்த தேவிக்கு நான் ஒருகாலும் து
ரோகம் செய்யேன் ! மஹாராஜா ! மஹாராஜா !
|
பு.
|
நீலவேணி ! [ வாளை உருவி ] அந்நிருபத்தை நீயே கொடுக்
கின்றையா அல்லது உன்னைக் கொன்று எடுத்துக்
கொள்ளவா?
|
நீ.
|
மஹாராஜா ! தாம் எப்படியாவது என்னுயிரைக் காப்
பாற்றவேண்டும். ஐயோ ! என்னுயிர் போனாலும் வேறெவ
ருக்கும் காண்பிப்ப தில்லையென்று பிரமாணம் செய்
திருக்கிறேனே !
|
பு.
|
கொடு இப்படி ! [ பிடிங்கிக்கொண்டு ] "மந்திரி
சத்தியசீலர்
அவர்களுக்கு"- [பிரித்து
வாசிக்கிறார்.]
"எனது பிராணநாதர் அவர்களுக்கு" என்ன !
[திடுக்கிட்
டெழுந்து நிருபத்தை விரைவில்
தனக்குள்
வாசித்துப் பார்த்து அதிக
கோபத்துடன்
கிழித் தெறிகிறார்.]
போ ! என் முன் நில்லாதே !
[நீலவேணியைப்
பிடித்து அறைக்கு வெளி
யாகத்
தள்ளிவிட்டு, மஞ்சத்தின்மீது
சாய்கிறார். ]
|
வனை.
|
பிராணநாதா ! பிராணநாதா ! இதென்ன? இதென்ன
மஹாராஜா !
|
பு.
|
வசந்தசேனை ! என்னை இனி மஹாராஜாவென் றழை
யாதே ! நான் இனி அப்பெயரை வகிக்கத் தக்கவ
னல்லன்.
|
வனை.
|
என்ன இது பிராணநாதா? ஏதோ நீலவேணி நிருபம்
கொண்டுவந்து கொடுத்தாள் ; அதைக் கிழித் தெறிந்து
விட்டு இவ்வாறு துயரப்படுகிறீரே! என்ன சமாசாரம்?
என்ன நிருபம்? என்னிடங் கூறலாகாதா?
|