பக்கம் எண் :

காட்சி-1]மனோஹரன்71

னொரு முறை வாசித்துப் பார்ப்போம்- [ மறுபடியும் படிக்
கிறார் தனக்குள். ]  சீ !  சந்தேக மில்லை !  இதென்ன விந்தை ! 
எனக்கா இப்படி எழுதுவது?-

வனை.

நீலவேணி, ஏன் இங்கு நிற்கிறாய்? போ.
             [நீலவேணி அகஸ்மாத்தாய் விழுவதுபோல்
                மற்றொரு நிருபத்தைக் கீழே விட்டு, திடீ
                ரென்று பயந்தவள்போல் அதை எடுத்து
                மறைத்துக் கொள்ளுகிறாள்.] 
நீலவேணி, அதென்ன?

பு.

நீலவேணி, அதென்ன, நிருபமா?

நீ.

[பயப்படுவதுபோல் நடித்து]  ஆம்.  [போக முயல்கிறாள்.] 

பு.

நீலவேணி !  வா இப்படி, நான் கேட்டுக் கொண் டிருக்கிறேன், எங்கே போகிறாய்?

நீ.

இல்லை.

பு.

என்ன நிருபம் அது? - என்ன !  நான் கேட்கிறேன், சும்மா இருக்கிறாய்?

நீ.

மஹாராஜா ! 

பு.

என்ன? சீக்கிரம் சொல் ! 

நீ.

[மஹாராஜாவின் காலில் வீழ்ந்து]  மஹாராஜா, என்னை மன்
னிக்கவேண்டும். இந்த நிருபத்தைப் பற்றி என்னை ஒன்
றும் கேட்கலாகாது, தம்மை இரந்து வேண்டிக்கொள்ளு
கிறேன். பத்மாவதிதேவி யறிந்தால் எனதுயிர் போய்
விடும் ! 

பு.

என்ன ஆச்சரியமாயிருக்கிறது !  பத்மாவதியின் நிருபமா?
எனக்கா? யாருக்கு அது?

நீ.

மஹாராஜா. தமக் கல்ல, பத்மாவதிதேவி- எனக்கு-

பு.

எனக் கல்ல !  பிறகு யாருக்கு?

நீ.

இதை ஒருவருக்கும் வெளியிடலாகாது, வெளியிட்டால்
உனதுயிர் போய்விடுமென்று எனக்குக் கட்டளையிட்
டார்கள் பத்மாவதிதேவி.