பக்கம் எண் :

70மனோஹரன்[அங்கம்-3

திருப்பதே நலம். வேண்டுமென்றால் இது பத்மாவதியைக்
குறித்த விஷயமென்று மாத்திரம் கூறுகிறேன்.- வாரும்
போஜனங் கொள்ள.

பு.

பத்மாவதியைப் பற்றிய விஷயமா !  அவளைப் பற்றிய
விஷயமென்ன இருக்கப்போகிறது? -வசந்தசேனை, நீ முற்றிலும்
ஆதியோடந்தமாகக் கூறினாலொழிய நான் வரமாட்டேன்,
ஒரே வார்த்தை ! 

வனை.

பிராணநாதா, நீர் என்னைக் கொன்றாலும் சரி, நான்
ஒருவர் மீது கோள் சொல்லமாட்டேன்.
                [ஒரு புறமாய்ப் போய் உட்கார்ந்துகொண்டு,
மெல்லச் சைகை செய்கிறாள். ] 
மெல்ல நீலவேணி வருகிறாள்.

நீ.

மஹாராஜா, நான் வரலாமோ?

பு.

என்ன சமாசாரம்?

நீ.

ஒன்றுமில்லை, தங்க ளிடத்தில் ஒரு நிருபம் கொடுக்க வேண்டி யிருக்கிறது.

பு.

என்ன நிருபம்?

நீ.

பெரிய ராணி கொடுக்கும்படி கட்டளை யிட்டார்கள்.

பு.

உனக்கென்ன பயித்தியம் பிடித்திருக்கிறதோ? என்னிடமா? பத்மாவதியா?

நீ.

ஆம், இதோ பாரும்.

பு.

இது கனவா?- (படிக்கிறார்.) "சோழ நாட்டுக் கெடிஸ்கலாதிபதி
புருஷோத்தம மஹாராஜாவின் சன்னிதானத்திற்கு"-
பத்மாவதியின் கடிதமா இது?

நீ.

ஆம்.

பு.

ஆம். சந்தேக மில்லை. அவளுடைய கையெழுத்து எனக்கு
ஞாபக மிருக்கிறது !  - என்ன ஆச்சரியம் ! 
                    [ பிரித்துத் தனக்குள் படிக்கிறார். ] 
என்ன? இதென்ன இது- கனவு காண்கிறேனா என்ன? -
பத்மாவதியா நமக்கு இப்படி எழுதுகிறாள்? இன்