|
|
வது நியாயமன்று-எடும் வாளை ! புருஷோத்தமராஜனே !
காத்துக்கொள்ளும் உமது தலையைச் சௌரியமிருந்தால் !
[சிம்மாசனத்தின் மீது பாய்ந்து வாளை
யோங்குகிறான். சபையோருக்குள்
பெருங்குழப்பமும் ஆரவாரமுமுண்
டாகிறது. ]
மறைந்திருந்த பத்மாவதி வேகமாய் வருகிறாள்.
|
| ப.
|
[மனோஹரன் கரத்தைப் பிடித்துக்கொள்ளுகிறாள் ; முக்காடு
நழுவி
முகம் விளங்குகிறது.] மனோஹரா ! நில் ! விடு வாளை !
|
எல்லோரும்.
பத்மாவதிதேவி ! பத்மாவதிதேவி !
|
| ம.
|
அம்மா ! இங்கெங்கு வந்தீர்கள்? அங்கல்லவோ
இருந்
தீர்களென்று பார்த்தேன் ! இங்கே ஏது வந்தது?
|
| ப.
|
அதெல்லா மிருக்கட்டும், விடு வாளை !
நீ எனக்கு வாக்
களித்த தென்ன, இப்பொழுது செய்யத் துணிந்த
தென்ன? விடு வாளை !
|
| ம.
|
அம்மணி ! இப்பொழு தென்னை மன்னிக்கவேண்டும்.
இவ்விருவரையுங் கொன்றே என் வாளை விடுவேன் ! -
புருஷோத்தமராஜனே ! எங்கே நழுகப் பார்க்கிறீர்?
|
| ப.
|
மனோஹரா ! என்ன, உன்னையும் மறந்து
பேசுகிறாய் !
விடு உடனே வாளை !
|
| ம.
|
அம்மணி ! சற்று முன்பாக மஹாராஜா கூறியதைக்கேட்
டீரா நீர்? இதோ இவர்களிருவரையும் க்ஷணப்பொழு
தில் கொன்று, நமக்கு இவர்களிழைத்த தீங்கிற்கெல்லாம்
பழி வாங்குகிறேன். இதோ உமது கண்முன்பாகவே !
சற்று ஒதுங்கி யிரும்? என் முன் நிற்கவேண்டாம் !
|
| ப.
|
நீ இந்த வாளைக் கொடுத்துவிட்டுப் பின்
சென்றாலல்லா
மல் நான் இவ்விடத்தை விட்டுப் பெயரேன் !
|
| ம.
|
அம்மணி ! சுத்தவீரனாகிய நானோ முன்
வைத்த காலைப்
பின் வாங்குவேன்? மானமாகிய ஆபரணத்தையே முத
லாகக் கொண்ட நானோ என்னை இழிவாகப் பேசியவர்
களைச் சும்மா விட்டுவிடுவேன்?
|