பக்கம் எண் :

94மனோஹரன்[அங்கம்-3

ப.

மனோஹரா, என் சொற்படி கேளாய் நீ, எனக்குச்
செய்த வாக்குத் தத்தத்தை மறந்தனையோ?

ம.

அம்மா !  அதை யெல்லா மிப்பொழுது நான் யோசிக்க
மாட்டேன். இப்பொழுது நீர் என்னைத் தடுப்பதிற் பய
னில்லை !  ஒதுங்கி யிரும் சற்றே ! 

ப.

மனோஹரா !  என் சொல்லைக் கேட்கமாட்டாய் நீ?

ம.

கேளேன் இப்பொழுது மும்மூர்த்திகள் வந்து தடுத்த
போதிலும், என் பகையை முடித்தே மறுவேலை பார்ப்
பேன் ! 

ப.

நீ என் குமாரன் என்பது உண்மையானால் விடு வாளை ! 

ம.

அம்மணி !  இதென்ன இது?

ப.

மனோஹரா !  உனக்கு என் சொற்படி நடக்க இஷ்டமில்
லாதிருக்குமாயின், முதலில் உன்னைப் பெற்ற தாயாகிய
என்னைக் கொன்ற பிறகே நீ அங்கு செல்வாய் !  உன்னைப்
பெற்ற உதரத்தின் உதிரத்தில் உன் வாளைத் தோய்த்த
பிறகே மஹாராஜாவிடம் நீ அணுகுவாய் !  அப்படி உனக்
கிஷ்ட மிருந்தால்-இதோ நிற்கிறேன்-நான் பெண்பால்,
உன்னை யீன்ற பேதை-என்னை முதலிற் கொன்றுவிட்டு
பிறகு ஒரு அடி யெடுத்து வைப்பாய் !  -உம் !  ஏன்
யோசிக்கிறாய்? கொல் என்னை முன்பு !  இதற்குத் தானே
உன்னைப் பத்து மாதம் சுமந்து வருந்திப் பெற்றேன் ! 

ம.

[ பாதத்தில் வீழ்ந்து கதறிப் புலம்பி ]  அம்மணி !  அம்மணி ! 
என்ன வார்த்தை சொன்னீர்கள் !  ஐயோ !  இதையும்
உமது வாயினின்றும் நான் கேட்க வேண்டுமா? அம்மா ! 
என்னை உயிருடன் கொல்கிறீர்களே உமது மொழியால் ! 
மஹாராஜா என்னைக் கொல்லப்பார்த்தார், நீர் என்னைக்
கொன்றே தீர்த்து விடுகிறீர்கள் !  ஒரு வார்த்தை சொல்
லுமே, ஒரு க்ஷணப்பொழுது எனக்கு விடையளியுமே ! 
அதற்குள் இவர்களிருவரையுங் கொன்று, என் மானத்