பக்கம் எண் :

காட்சி-4]மனோஹரன்95

தைக் காப்பாற்றிக் கொள்ளுகிறேன் !  ஐயோ !  வெற்றி
வீரனாகிய மனோஹரன் இவ்வசையைக் காதாரக்கேட்டும்
சும்மா பொறுத்துக் கொண்டிருந்துவிட்டான் என்று
எல்லோரும் ஏளனம் செய்வார்களே நாளை !  அம்மணி ! 
அம்மணி ! 

ப. மனோஹரா !  அப்படி ஒருகாலும் ஏளனம் செய்யமாட்
டார்கள் மூவுலகையும் வெல்லும் வல்லமையுடைய
மனோஹரன், தன் தாயார் சொற்படி நடந்தானெனப்
புகழ்வார்கள் !  மனோஹரா, இனி நான் பன் முறை
உனக்குக் கூறமாட்டேன், நீ என் பிள்ளை யென்பது
உண்மையானால் எழுந்திரு உடனே !

ம. அம்மணி !                  [எழுந்திருக்கிறான். ] 

ப. என் சொற்படி நடக்கிறாயா, மாட்டாயா? நீ என் மகனா
அல்லவா?

ம. என்ன உமது சொற்படி நடப்பது?

ப. உனது வாளை இப்படிக் கொடு.

ம. இதோ !                     [வீசி எறிகிறான். ] 

ப. மனோஹரா !  உனக்கென்ன அவ்வளவு அவமரியாதை?

ம. அம்மா, இப்பொழுதாவது ஒரு வார்த்தை சொல்லும்,
நிராயுதபாணியாய் இப்படியே இவர்க ளிருவரையும்
கசக்கிப் பிழிந்து விடுகிறேன் ! 

ப. அதெல்லாமிருக்கட்டும் !  என் சொற்படி கேட்கின்றாயா
மாட்டாயா?

ம. தீர்ந்ததே, இன்னும் மென்ன?

ப. நீ மஹாராஜாவின் சொற்படி நடக்கவேண்டும்.

ம. மஹாராவின் சொற்படி நடப்பதாவது !  அவர் சொற்
படி நடப்பதென்றால் நான் இறக்க வேண்டியதுதான் ! 

ப. ஆம் ! - உன்னை யிறக்கும்படியாகத்தான் சொல்லுகிறேன்.
மஹாராஜா அவ்வாறு கூறிய பிறகு, நாமிவ்வுலகில் இருப்
பது நியாயமன்று. அவர் சொற்படி நீ இறப்பாய்-