பக்கம் எண் :

96மனோஹரன்[அங்கம்-3

நானும் விஜயாளும் இதோ அக்னிப் பிரவேசமாகி
உன்னை வந்து சேர்கிறோம்- அஞ்சாதே ! 

ம. அம்மணி !  என்னை இறக்கும்படியா சொல்லுகிறீர்கள்! 

ப. ஆம்.

ம. அம்மா !  உம்முடைய வாயால்- என்னை இறந்து போகும்
படியா சொல்லுகிறீர்கள்?

ப. ஆம்.

ம. ஆம் ! -சரி, இனி உயிர் வாழ்வது நியாயமன்று-சத்திய
சீலரே !  என் பிரக்ஞை தப்பும் போலிருக்கிறது !  நான்
மூர்ச்சையா யிருக்கும்பொழுதே என்னைக் கொன்று
விடும்- உமது கையால் !         [ மூர்ச்சையாகிறான். ] 

எல்லோரும். ஹா !  ஹா !               [கண்ணீர் விடுகின்றனர். ] 

ப. சத்தியசீலரே !  மனோஹரனை மூர்ச்சையா யிருக்கும்
பொழுது கொல்வது தர்மமன்று ;  பிரக்ஞை வந்தவுடன்
நமது அரண்மனைக் கொத்தளத் தருகிற் கொண்டுபோய்-
கொன்று விடும் !

                [தன்முகத்தை மூடி விரைந்து வெளி
                யிற் செல்கிறாள்.-சபையில் ஆரவார
                முண் டாகிறது - புருஷோத்தமன்
                வசந்தசேனையை ஒரு புறமாகத் தள்
                ளிவிட்டு மற்றொரு புறமாகப் போகி
                றார். தலைசாய்த்தவண்ணமாய் வசந்
                தசேனை பின்தொடருகிறாள். சபை
                கலைகிறது. ]  


                  காட்சி முடிகிறது.