பக்கம் எண் :

காட்சி-5]மனோஹரன்97

ஐந்தாம் காட்சி.

இடம்- கோட்டைமதில். காலம்-நள்ளிரவு.

புருஷோத்தமன் ஓர் சேவகனைப்போல் வேஷம்பூண்டு

அரங்கத்தின் ஓர் புறத்திலிருந்து வருகிறார்.

பு. என் மனம்போலவே இன்று ஆகாயமெல்லாம் இருண்
டிருக்கிறது !  ஆஹா !  நான் என்ன தப்பிதம் செய்ய
விருந்தேன் !  பதிவிரதையாகிய பத்மாவதியின்மீது பழி
சாற்றி, என் மைந்தனாகிய மனோஹரனைக் கொல்ல விருந்
தேனே !  பத்மாவதி வந்து தடுக்காவிட்டால் நான் இன்று
மனோஹரன் வாளால் இறந்திருப்பேனென்பது நிச்சயம் ! 
எனக்குத்துரோகம் செய்திருப்பவளாயின், நான் அவளை
இந்தப் பதினாறு வருடங்களாகப் பிரிந்திருந்தது மன்றி,
எவ்வளவோ தீங்கிழைத்தற்கு, என்னைக் கொல்லும்படி
யல்லவோ கட்டளையிட்டிருக்கவேண்டும் ! -இது தான்
குறித்த இடமென்பதற்குச் சந்தேகமில்லை இருளில்
எனக்கொன்றும் தெரியவில்லை ;  எப்படியும் நான் மனோ
ஹர னுயிரைக் காப்பாற்றவேண்டும் !  ஐயோ !  நான்
மஹாராஜாவாயிருந்தும் நேரிற் சென்று இதைக் கூற
மன வுறுதி இன்றி, இவ்வேடந்தரித்து, ஒற்றனைப்போல்
என் மைந்தன் முன்னே நான் செல்லும்படி நேரிட்ட
தல்லவா? ஆம், ஆம் !  மனோஹரன் முகத்தை நான் இவ்
வளவு தூரம் எல்லாம் நடந்துவிட்ட பிறகு, எப்படி ஏற
நோக்குவது? அதோ வருகிறார்கள் !  அவர்கள் தான்
போல் தோற்றுகிறது-மனோஹரனும் சத்தியசீலனுந்
தான் !  சந்தேகமில்லை. நான் ஒளிந்திருந்து இவர்கள்
என்ன பேசிக்கொள்ளுகிறார்களெனக் கண்டறிந்து பிறகு
சமயத்தில் இவ்வோலையையும், கணையாழியையுங் கொடு
த்து மனோஹரன் மடியாவண்ணம் செய்யவேண்டும் ; 
இதோ வந்து விட்டார்கள் !
                   [ஒரு புறமாக மறைந்து நிற்கிறார்.]
       13