பக்கம் எண் :

ஆராய்ச்சிப் படிகள் 191
 
     மூன்றாவது: மிகை நாடிய பிறகு, கொள்ளல் தள்ளல் வேண்டும் அன்றோ? குணம்
மிகுந்ததைக் கொள்ள வேண்டும்; குற்றம் மிகுந்ததைத் தள்ள வேண்டும். அப்போதும்,
கண்மூடி ஏற்றுக்கொள்ளாமல், முழுதும் இத்தகையது என்று போற்றாமல்,மிகுந்திருக்கும்
பண்பு பற்றியே ஏற்றுக் கொள்ள வேண்டும். சிறு குறை பற்றி ஒன்றை விடுத்தல்
கூடாது; ஒரு குறையும் இல்லாதது என்று ஒன்றைக் கண்மூடி ஏற்றலும் கூடாது. இதுவே
மிக்க கொளல் என்று திருவள்ளுவர் கூறிய ஆராய்ச்சி முடிவாகும்.
 
  குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

(திரு. 504)