இன்னொருவன் அங்கே வருகிறான். இந்த மல்லிகை, மண்ணின் சத்தையும் நீரையும் சூரிய ஒளியையும் காற்றையும் எப்படி உட்கொள்கிறது. அவற்றை எப்படி உணவாக்கிக் கொண்டு வளர்கிறது. எப்படி இலை விடுகிறது, எப்படிக் கிளைத்துப் படர்கிறது, எப்படிப் பெரும் பொழுதும் சிறு பொழுதும் அறிந்து பூக்கிறது. அந்தப் பூவிற்கு நிறமும் மணமும் எப்படி அமைகின்றன என்றெல்லாம் ஆராய்ச்சி செய்துவிட்டுப் போகிறான். |