பக்கம் எண் :

தமிழுக்கு ஆங்கில நட்பும் வடமொழிப் பகையும்11

இனமாம். உலகு அல்லது உலகம் என்னும் சொற்குத் தமிழ் வேர்ப் பொருளா வடமொழி வேர்ப்பொருளா, எது பொருந்தும் என்று பகுத்தறிவுடையார் கண்டு கொள்க.

     லோக்க என்பது லோக் என்று இந்தியிற் குறுகும்.

     ஐயன்:
     ஐ என்பது தலைவனைக் குறிக்கும் பெயர்.
     "என் ஐ முன் நில்லன்மின்"

(771)

என்பது குறள்    
     தலைவன் எனினும் பெரியோன் எனினும் ஒக்கும். அரசன், ஆசிரியன், தந்தை, தாய், அண்ணன் என ஒருவர்க்கு ஐந்து பெரியோர் உளர். அவர்க்கெல்லாம் ஐ என்பது பொதுப்பெயர். தாயைக் குறிக்கும்போது அது ஆய் என்று திரியும். ஐ என்பது 'அன்' ஈறு பெறின் ஐயன் என்றாகும். ஐயன் என்பதற்கு ஐயை என்பது பெண்பால், அண்ணனைக் குறிக்கும் போது ஐ, ஐயன் என்னும் சொற்கள் தன்னை, தமையன் எனத் தன், தம் என்னும் முன்னொட்டுப் பெறும்.
     தமிழருட் பலவகுப்பார், அவருள்ளும் சிறப்பாகத் தாழ்த்தப்பட்டவர், தந்தையை ஐயன் அல்லது ஐயா (விளி வடிவம்) என்றே அழைக்கின்றனர், ஆசிரியர் எவ் வகுப்பாராயிருப்பினும், அவரை ஐயர் என்றழைப்பது வடார்க்காட்டு ஆம்பூர் வட்டத்தார் வழக்கு.
     பெரியோரை யெல்லாம் ஐயா என்று குறிப்பதும் விளிப்பதும் தொன்றுதொட்டுத் தமிழர் வழக்கம். மக்களுட் பெரியார் முனிவர் என்னும் கருத்துப்பற்றி, அவரைச் சிறப்பாக ஐயர் என்பது தமிழ் நூன் மரபு.
     "ஐயர் யாத்தனர் கரணம் என்ப."

(1091)

என்பது தொல்காப்பியம்
     பிங்கல நிகண்டில் முனிவரைப்பற்றிய 3ஆம் பகுதி ஐயர் வகை எனப் பெயர் பெற்றுளது.
     முனிவரிலும் பெரியவர் தெய்வங்களாதலின், தெய்வங்கட்கும் கடவுட்கும் ஐயன் என்னும் பெயர் வழங்கும்.
     ஐயன் = சாத்தன் (ஐயனார்), கடவுள்.
     ஐயை = காளி, மலைமகள்.
     இங்ஙன மெல்லாம் தொன்றுதொட்டு வழங்கும் ஐயன் என்னும் தென்சொல்லை, ஆர்ய என்னும் வடசொற்சிதை வென்பர் வடவர்.
வடவை:
     வடவை அல்லது வடந்தை என்பது வடம் (வடக்கு) என்னும் திசைப் பெயரினின்று திரிந்து, வடமுனையத்தில் (துருவத்தில்) அவ்வப்போது