| "ஆற்றங் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே-ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு," |
என்றார் அருந்தமிழ் மூதாட்டியார் ஒளவையார்.. |
உண்மை இங்ஙன மிருப்பவும், "உழவுத்தொழிலில் பூச்சி புழுக்களும் செடி கொடிகளும் கொல்லப்படுவதால், அதை இழிந்ததென்று உயர்ந்தோர் கைவிட்டனர்." என்று ஆரியப் போலி அறநூல்கள் கூறும். இதினின்று தமிழ்க் கொள்கைக்கும் ஆரியக் கொள்கைக்குமுரிய ஏற்றத் தாழ்வைக் கண்டு கொள்க. |
தலைமைக் குடிவாசி |
மேற்கூறிய இயல்புகளால், உழவனே தலைமைக் குடிவாசி என்பது பெறப்படும். இதை உட்கொண்டே |
| "தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்(கு) ஐம்புலத்தா றோம்பல் தலை." | (குறள். 43) |
| "இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை." | (குறள். 41) |
| "இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு." | (குறள். 81) |
| "வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்." | (குறள். 85) |
என்று குறிப்பாக வேளாளனைப் பாராட்டிக் கூறினர் திருவள்ளுவர். |