பக்கம் எண் :

திருக்குறட் சிறப்புச் சொற்களும் சொல்லாட்சியும்67

  "ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
பேரறி வாளன் திரு"

(215)

     குறியெதிர்ப்பை = கைம்மாறு கருதல்.

     "வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து"

(221)

     தொல்வரவு = தொன்றுதொட்டு வரும் குடிப் பண்பு
     "தொல்வரவுந் தோலுங் கெடுக்குந் தொகையாக
நல்குர வென்னும் நசை"

(1043)

     மலர்மிசை யேகினான் = கடவுள் (அடியார் நெஞ்சத் தாமரையின்கண் அமர்ந்தவன்)
     "மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்"

(3)

     வாலறிவன் = கடவுள் (தூய அறிவினை யுடையவன்).
  "கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்"

(2)

     வாழ்க்கைத்துணை = மனைவி.
     இது இல்லறவியலில் 2ஆம் அதிகாரத் தலைப்பு. வாழ்க்கைப்படுதல் (மனைவியாதல்) என்னும் பாண்டி நாட்டு வழக்கு இங்குக் கவனிக்கத்தக்கது.
3. சிறப்புச் சொல்வடிவம்
     அறி = அறிவு.
     இஃது முதனிலைத் தொழிற்பெயர்.
  "அறிகொன் றறியா னெனினு முறுதி
உழையிருந்தான் கூறல் கடன்"

(638)

     ஒப்பாரி = ஒப்பு, உவமை.
  "மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்."

(1071)

     இழவிற்கழும் ஒப்பாரியையும் ஒப்பென்பர்.
     ஒருவந்தம் = ஒருதலை. தலை=அந்தம்.
  "வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்த மொல்லைக் கெடும்"

(563)

  "ஆக்க மிழந்தேமென் றல்லாவா ரூக்கம்
ஒருவந்தங் கைத்துடை யார்"

(593)

     கெடு = கேடு (வறுமை).

     இதுவும் முதனிலைத் தொழிற்பெயர்.