| "ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம் பேரறி வாளன் திரு" | (215) |
குறியெதிர்ப்பை = கைம்மாறு கருதல். |
| "வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து" | (221) |
தொல்வரவு = தொன்றுதொட்டு வரும் குடிப் பண்பு |
| "தொல்வரவுந் தோலுங் கெடுக்குந் தொகையாக நல்குர வென்னும் நசை" | (1043) |
| மலர்மிசை யேகினான் = கடவுள் (அடியார் நெஞ்சத் தாமரையின்கண் அமர்ந்தவன்) |
| "மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்" | (3) |
வாலறிவன் = கடவுள் (தூய அறிவினை யுடையவன்). |
| "கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்" | (2) |
வாழ்க்கைத்துணை = மனைவி. |
இது இல்லறவியலில் 2ஆம் அதிகாரத் தலைப்பு. வாழ்க்கைப்படுதல் (மனைவியாதல்) என்னும் பாண்டி நாட்டு வழக்கு இங்குக் கவனிக்கத்தக்கது. |
3. சிறப்புச் சொல்வடிவம் |
அறி = அறிவு. |
இஃது முதனிலைத் தொழிற்பெயர். |
| "அறிகொன் றறியா னெனினு முறுதி உழையிருந்தான் கூறல் கடன்" | (638) |
ஒப்பாரி = ஒப்பு, உவமை. |
| "மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில்." | (1071) |
இழவிற்கழும் ஒப்பாரியையும் ஒப்பென்பர். |
ஒருவந்தம் = ஒருதலை. தலை=அந்தம். |
| "வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்த மொல்லைக் கெடும்" | (563) |
| "ஆக்க மிழந்தேமென் றல்லாவா ரூக்கம் ஒருவந்தங் கைத்துடை யார்" | (593) |
கெடு = கேடு (வறுமை). |
இதுவும் முதனிலைத் தொழிற்பெயர். |