(3) அவர், தாம் பதிப்பித்த ஒழிவிலொடுக்க உரையிலே (திருத்தம்) (பிழை) சுழு முனையை - சுழி முனை என்றும், சொர்ப்பனத்தை - சொற்பனம் என்றும், ஞாதிருவை - ஞாதுரு என்றும் கேட்க என்பதை - கேழ்க்க என்றும் சரியையை - சரிதை என்றும் பிராரத்தத்தை - பிராரத்துவம் என்றும், தோன்றிய விருது காலம் என்பதை - தோன்றப்பட்ட விருது காலம் என்றும், நூல் கேட்டலை - நூற்கேட்டல் என்றும், அழியுமித்தேகாதி என்பதை - அழியப்பட்ட வித் தேகாதி என்றும், ‘மண்ணினின்றும் கடகல சாதி காரியங்கள்’ என்பதில் ‘மண்ணினின்று’ என்பதை - ‘மண்ணை’ என்றும், நூல்கள் அறிவிக்க மாட்டா என்பதை - நூல்கள் அறிவிக்க மாட்டாது என்றும், மகேசுரனை - மயேசுரன் என்றும், இச்சாயத்தினத்தை - இச்சா யெத்தினம் என்றும், அத்தசமயனத்தை-அத்தமானம் என்றும், அவைகள் அறியா என்பதை - அவைகள் அறியாது என்றும், ‘இச்சா ஞானம் முதலிய வருவிக்கப்பட்டன’ என்பதில் ‘பட்டன’ என்பதை - பட்டது என்றும், போய இடத்து ஆன்மா என்பதை - போய இடத்து வான்மா என்றும், பெத்த தசையை - பெத்ததிசை என்றும், வர்ணத்தை - வர்ந்நம் என்றும், கதிரவனுக்கு அசுத்தமும் இன்றாயது என்பதை - கதிர வனுக்கும் சுத்தமும் இன்றாயது என்றும், நேதி களைதலை - நியதி களைதல் என்றும், வெதுப்புதலை - வெதிப்புதல் என்றும், உற்பிச்சத்தை - உற்பீசம் என்றும், தொடையை - துடை என்றும், மித்தியா ரூபத்தை - மித்தையா ரூபம் என்றும், ஆக என்னும் வினையெச்சங்களை - ஆய் என்றும் பதிப்பித்து இருக்கின்றாரே! (4) அப் புத்தகத்தில், பல இடங்களில் பெயரெச்சங்களை முற்று எனக் கொண்டு, முற்றுக் குறி கொடுத்து வரி முடிவு செய்து, |