பக்கம் எண் :

ராய்சந்திர பாய்103

Untitled Document
இரண்டாம் பாகம்

1. ராய்ச்சந்திர பாய்

     பம்பாய் துறைமுகத்தில் கடல் கொந்தளிப்பாக இருந்தது என்று
முந்திய அத்தியாயத்தில் கூறினேன்.     ஜூன், ஜூலை மாதங்களில்
அரபுக் கடலில்       இவ்விதம் இருப்பது சகஜம்.    ஏடனிலிருந்து
நெடுகவுமே அலை அதிகமாகவே இருந்தது.    அநேகமாக எல்லாப்
பிரயாணிகளுக்கும் மயக்கமும் வாந்தியுந்தான்.நான் ஒருவனே எதுவும்
இல்லாமல்    சுகமாக இருந்தேன்.     கப்பலின் மேல்    தளத்தில்
இருந்துகொண்டு, காற்றின் ஆவேசத்தையும்,   அலைகள் வேகமாகக்
கப்பலில்     வந்து       மோதுவதையும் பார்த்து   ஆனந்தித்துக்
கொண்டிருந்தேன்.     என்னைத் தவிர    இரண்டொருவரே காலை
ஆகாரம்சாப்பிட        வருவார்கள்.   ஓட்ஸ் கஞ்சித் தட்டை மிக
எச்சரிக்கையுடன் மடியில் வைத்துக்கொண்டு சாப்பிடுவேன்.கொஞ்சம்
உஷாராக இல்லாது போனால்   மடியிலெல்லாம் கஞ்சி கொட்டிவிடும்.

     வெளிப்புயல்,    என் அகப்புயலுக்கு      ஒரு சின்னமாகவே
இருந்தது.   வெளிப்புயல்       எவ்விதம்     என்னைக்  கலங்கச்
செய்யவில்லையோ அதைப்போலவே அகப்புயலைக்   குறித்தும் நான்
கலங்கவில்லை        என்று சொல்லலாம்   என்றே நினைக்கிறேன்.
சாதிக்கட்டுப்பாட்டுத் தொல்லை வேறு, என்னை எதிர்நோக்கி நின்றது.
பாரிஸ்டர் தொழிலைத் தொடங்குவது    சம்பந்தமாக எனக்கு இருந்து
வந்த அதைரியங்களை முன்பே சொல்லியிருக்கிறேன். மேலும்,   நான்
சீர்திருத்தக்காரன். எனவே சில         சீர்திருத்தங்களை எவ்விதம்
ஆரம்பிக்கலாம் என்பதைக் குறித்தும் சிந்தித்துக்   கொண்டிருந்தேன்.
ஆனால்,   நான்    எதிர்பார்த்ததையெல்லாம் விட இன்னும் அதிகக்
கஷ்டங்கள் எனக்குக் காத்துக் கொண்டிருந்தன.

     என்   மூத்த சகோதரர்     என்னைச்     சந்திப்பதற்காகத்
துறைமுகத்திற்கு வந்திருந்தார்.  அவர்,    இதற்கு முன்பே டாக்டர்
மேத்தாவுடனும்    அவருடைய            மூத்த சகோதரருடனும்
பழக்கமாகிவிட்டார். தமது வீட்டிலேயே நான் தங்க வேண்டும் என்று
டாக்டர் மேத்தா       வற்புறுத்தியதன் பேரில் நாங்கள்    அங்கே
சென்றோம்.     இவ்விதம் இங்கிலாந்தில்        ஏற்பட்ட பழக்கம்
இந்தியாவிலும் தொடர்ந்து,    இரு     குடும்பங்களுக்கும் இடையே
நிரந்தரமான நட்பாக வளர்ந்து விட்டது.

     என் தாயாரைப்    பார்க்கவேண்டும்     என்று என் உள்ளம்
துடித்துக்கொண்டிருந்தது.    என்னைத் திரும்ப வரவேற்று, மார்புடன்
தழுவி மகிழ,       அவர் தமது பூதவுடலுடன் அப்பொழுது இல்லை
என்பது எனக்குத் தெரியாது.  அவர் காலமாகிவிட்டார் என்ற துக்கச்
செய்தி எனக்கு அறிவிக்கப்பட்டது. அதன்பேரில்