பக்கம் எண் :

12சத்திய சோதனை

Untitled Document

சிறைத்தண்டனையே,இத்தகைய காரியத்திற்கு உடன் பட்டுவிடக் கூடிய
பெண்ணல்ல, கஸ்தூரிபாய். தான்   விரும்பிய இடங்களுக்கு விரும்பிய
போதெல்லாம் அவள் பிடிவாதமாகப் போய்க் கொண்டுதான் இருந்தாள்.
நான் கட்டுப்பாடுகளை       அதிகமாக விதிக்க விதிக்க, அவள் தன்
இஷ்டம்போல் நடப்பதும் அதிகமாகிக்   கொண்டே வந்தது. அதனால்
எனக்கு ஆத்திரமும் அதிகமாகிக் கொண்டே   போயிற்று. குழந்தைத்
தம்பதிகளான    எங்களுக்குள்,  ஒருவரோடொருவர்      பேசாமல்
இருந்துவிடுவது என்பது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது.என்னுடைய
கட்டுத்  திட்டங்களைக் கஸ்தூரிபாய் மீறியதில் யாதொரு தவறுமில்லை
என்றே நான் இன்று    எண்ணுகிறேன். கோயிலுக்குப் போகக் கூடாது
என்றும், தன்        தோழிகளைப் போய்ப் பார்க்கக்கூடாது என்றும்
தடைவிதித்தால், கபடமற்ற  ஒரு பெண் அவற்றை எப்படிச் சகிப்பாள்?
அவளுக்குக் கட்டுத் திட்டங்களையெல்லாம்  விதிக்க எனக்கு உரிமை
இருக்கிறதென்றால், அதே போன்ற      உரிமை அவளுக்கும் உண்டு
அல்லவா? இவையெல்லாம் இன்று  எனக்குத் தெளிவாகப் புரிகின்றன.
ஆனால் அப்பொழுதோ     கணவனுக்குரிய       அதிகாரங்களைச்
செலுத்தியாக வேண்டும் என்றே நினைத்து வந்தேன்!

     என்றாலும், எங்களுடைய வாழ்க்கை, மாறாத  கசப்பு  நிறைந்த
வாழ்க்கையாகவே இருந்தது    என்று   வாசகர்கள்   நினைத்துவிட
வேண்டாம்.நான் அவளிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கெல்லாம்
அன்பே காரணம். மனைவி      என்றால் எப்படி இருக்க வேண்டும்
என்பதற்கு அவள்      உதாரணமாக விளங்கும்படி செய்யவே நான்
விரும்பினேன்.  அவள் தூய  வாழ்க்கை நடத்தி, நான் கற்றவைகளை
அவளும் கற்பதன் மூலம்       எங்கள் இருவருடைய வாழ்க்கையும்
எண்ணங்களும்    ஒன்றாக இருக்கும்படி செய்ய வேண்டும் என்பதே
என் அபிலாஷை.

     கஸ்தூரி பாய்க்கு அப்படிப்பட்ட அபிலாஷை ஏதாவது இருந்ததா
என்பது எனக்குத் தெரியாது. அவள் எழுதப்   படிக்கத் தெரியாதவள்.
சுபாவமாகவே    அவள் கபடமற்ற  தன்மையும், சுயேச்சை நோக்கும்,
விடாமுயற்சியும் உடையவள்.       குறைந்தபட்சம் என் விஷயத்தில்
மாத்திரம் பேச  வெட்கப்படுபவள்.      தன்னுடைய அறியாமையைக்
குறித்து அவளுக்குக் கவலையே இல்லை.நான் படித்து வந்தது, தானும்
அவ்வாறு படிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடும் உற்சாகத்தை
அவளுக்கு அளித்ததாக எனக்கு    ஞாபகமில்லை. ஆகையால் நான்
கொண்டிருந்த அபிலாஷையெல்லாம் என்னோடு தான் நின்றது என்று
எண்ணுகிறேன். அவள் ஒருத்தி    மீதே நான் என் முழு ஆசையும்
வைத்திருந்தது போல அவளும் என்மீது ஆசை வைக்க வேண்டும்