பக்கம் எண் :

214சத்திய சோதனை

Untitled Document
வண்டிகளில் ஏறுவதில்லை.   அவருக்கு     ஞாபக சக்தி அபாரமாக
இருந்தும், பரீட்சை    எழுதிப் பட்டங்களைப் பெற மறுத்து விட்டார்.
சுயேச்சையான   மனப்போக்கை வளர்த்துக் கொண்டிருந்தார். பார்ஸி
வகுப்பினராக இருந்தும் அவர்          சைவ உணவே சாப்பிடுவார்.
பேஸ்தன்ஜிக்கு        இத்தகைய கியாதி இல்லை. ஆனால், அவரது
புலமைக்கு லண்டனிலும் பிரபல்யம் இருந்தது.   எங்கள் இருவருக்கும்
இருந்த ஒற்றுமை          சைவ உணவில்தான். புலமையில் அவரை
நெருங்குவதென்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது.

     அவரை நான்       பம்பாயில்   மீண்டும் சந்தித்தேன். அவர்
ஹைகோர்ட்டின் பிரதம குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார். நான்
அவரைச் சந்தித்தபோது, அவர்  உயர்தரக் குஜராத்தி அகராதி ஒன்று
தயாரிக்கும்     வேலையில் ஈடுபட்டிருந்தார்.  என் தென்னாப்பிரிக்க
வேலையில் எனக்கு உதவி       செய்யுமாறு நான் கேட்காத நண்பர்
இல்லை. பேஸ்தன்ஜி பாத்ஷா         எனக்கு உதவி செய்ய மறுத்த
தோடல்லாமல், இனி     தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்ப வேண்டாம்
என்று எனக்குப் புத்திமதியும் சொன்னார்.

     அவர் கூறியதாவது “உமக்கு   உதவி செய்வது சாத்தியமில்லை.
நீர்        தென்னாப்பிரிக்காவுக்குப் போவது என்பது கூட எனக்குப்
பிடிக்கவில்லை. செய்வதற்கு நம்     நாட்டில் வேலையே இல்லையா?
இப்பொழுது பாரும்,    நம் மொழிக்குச்        செய்ய வேண்டியதே
எவ்வளவோ இருக்கிறது விஞ்ஞானச் சொற்களை  நம்மொழியில் நான்
கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. ஆனால்,  செய்ய வேண்டியிருக்கும்
வேலையில் இது ஒரு    சிறு பகுதியே நாட்டில் இருக்கும் வறுமையை
எண்ணிப்பாரும்.      தென்னாப்பிரிக்காவில் இருக்கும்   நம் மக்கள்
கஷ்டப்படுகிறார்கள்          என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்
உம்மைப்போன்ற ஒருவர் அந்த    வேலைக்காகப் பலியிடப்படுவதை
நான் விரும்பவில்லை. முதலில்     இங்கே சுயாட்சியைப் பெறுவோம்.
அதனால் அங்கிருக்கும் நம்மவர்களுக்குத் தானே உதவி செய்தவர்கள்
ஆவோம்.     உம் மனத்தை மாற்ற    என்னால் ஆகாது என்பதை
அறிவேன். என்றாலும்,   உம்மைப் போன்றவர்கள் யாரும் உம்முடன்
சேர்ந்து     உம்மைப் போல்           ஆகிவிடுவதற்கு உற்சாகம்
ஊட்டமாட்டேன்.“

     இந்தப் புத்திமதி எனக்குப்     பிடிக்கவில்லை. ஆயினும், ஸ்ரீ
பேஸ்தன்ஜி பாத்ஷா மீது        நான் கொண்டிருந்த மதிப்பை இது
அதிகமாக்கியது.    நாட்டினிடமும்    தாய் மொழியினிடமும் அவர்
கொண்டிருந்த பக்தி       என் மனத்தைக் கவர்ந்தது. இச் சம்பவம்
எங்களை இன்னும்       அதிகமாக நெருங்கிப் பழகும்படி செய்தது.
என்றாலும்    தென்னாப்பிரிக்காவில் எனக்கு இருந்த பணியை நான்
விடுவதற்குப் பதிலாக என்னுடைய தீர்மானத்தில் நான்