பக்கம் எண் :

238சத்திய சோதனை

Untitled Document
செல்வாக்குக்கும், அதன் நிர்வாகம் எவ்வளவு யோக்கியமாக நடந்து
வருகிறது என்பதற்கும்    சரியான அளவுகோல் ஆகும். ஒவ்வொரு
பொது ஸ்தாபனமும் இந்த      அளவுகோலுக்கு உட்பட வேண்டும்
என்பது என் கருத்து. ஆனால், யாரும் என்னைத் தவறாக எண்ணிக்
கொண்டுவிட வேண்டாம்.       சில ஸ்தாபனங்களை, அவைகளின்
தன்மையை    அனுசரித்து, நிரந்தரமான கட்டடம் இல்லாமல் நடத்த
முடியாது. நான் கூறியவை,          அத்தகைய ஸ்தாபனங்களுக்கு
பொருந்தாது. பொது ஸ்தாபனங்களின் நடைமுறைச்     செலவுகளை
ஒவ்வொரு வருடமும் தானாகக் கிடைக்கும்     சந்தாப் பணத்தைக்
கொண்டு        நிர்வகித்து வரவேண்டும் என்று சொல்லவே நான்
விரும்புகிறேன்.

     தென்னாப்பிரிக்க   சத்தியாக்கிரக நாட்களில்     இக் கருத்து
ஊர்ஜிதமாயிற்று. அந்த மகத்தான போராட்டம்,    ஆறு ஆண்டுகள்
வரை நடந்தது. அதற்கு     லட்சக்கணக்கான ரூபாய் தேவைப்படும்.
நிரந்தரமான நிதி      எதுவும் இல்லாமலேயே அதை நடத்தினோம்.
சந்தா கிடைக்காவிட்டால் அடுத்த நாளைக்கு என்ன  செய்வதென்று
எனக்குத் தெரியாமல்      இருந்த சமயங்களும் எனக்கு நினைவில்
இருக்கின்றன. ஆனால்,    வருங்காலத்தில் என்ன நேரும் என்பதை
நான் இப்பொழுது        சொல்லுவதற்கில்லை. இனிக் கூறப்போகும்
வரலாற்றில்,             மேலே சொன்ன கருத்துக்கள் சரியானபடி
நிரூபிக்கப்பட்டிருப்பதை வாசகர்கள் காணலாம்.

5. குழந்தைகளின் படிப்பு

     1897 ஜனவரியில், டர்பனில் நான்   இறங்கியபோது என்னுடன்
மூன்று குழந்தைகள் இருந்தார்கள். என் சகோதரியின் பத்து வயதான
மகன் ஒருவன்; ஒன்பது வயதும்,        ஐந்து வயதும் உள்ள என்
புத்திரர்கள் இருவர். இவர்களை எங்கே படிக்க வைப்பது?

     ஐரோப்பியக்  குழந்தைகளுக்கு   என்று   இருக்கும் பள்ளிக்
கூடங்களுக்கு நான் அவர்களை அனுப்பியிருக்கலாம். ஆனால், என்
குழந்தைகளுக்குச் சலுகை அளித்து,    விதிவிலக்குப் பெற்றால்தான்
அங்கே     சேர்த்துக் கொள்ளுவார்கள்.   வேறு எந்த இந்தியரின்
குழந்தைகளையும்      அப் பள்ளிக்கூடங்களில்        சேர்த்துக்
கொள்ளுவதில்லை. இந்தியக்     குழந்தைகளுக்கென்று, கிறிஸ்தவப்
பாதிரிகள் வைத்திருக்கும் பள்ளிக்கூடங்களில் அளிக்கப்படும் கல்வி
எனக்குப்    பிடிக்கவில்லையாகையால் என் குழந்தைகளை அங்கே
அனுப்ப நான் தயாராக இல்லை.     இதற்கு ஒரு காரணம், அங்கே
ஆங்கிலத்திலேயே          எல்லாப் பாடங்களும் போதிக்கப்பட்டு
வந்ததாகும். இல்லாவிட்டால், பிழையான  தமிழ் அல்லது ஹிந்தியில்
போதிப்பார்கள்.        இதையும் கஷ்டத்தின் பேரில்தான் ஏற்பாடு
செய்யவேண்டி இருந்திருக்கும். இதையும் மற்ற