பக்கம் எண் :

மண்,நீர்சிகிச்சை 323

Untitled Document
அவசியமே     மனிதனுக்கு இல்லை என்றுதான் நான் கருதுகிறேன்.
நோயுறுவோரில்        ஆயிரத்துக்கு 999 பேரை சரியான பத்தியச்
சாப்பாடு, நீர், மண் சிகிச்சை, இதே போன்ற  குடும்ப வைத்தியமுறை
ஆகியவற்றினாலேயே குணப்படுத்திவிடமுடியும்.    சிறு நோய் வந்து
விட்டாலும் டாக்டர், வைத்தியர்,      அல்லது    ஹக்கிமிடம் ஓடி,
எல்லா வகையான தாவர,      உலோக வகை மருந்துகளையெல்லாம்
விழுங்கிக் கொண்டிருப்பவர்கள்,      தங்கள் ஆயுளைக் குறைத்துக்
கொள்ளுவது  மாத்திரமல்ல, உடலுக்கு எஜமானர்களாக இருப்பதற்குப்
பதிலாக அதற்கு அடிமைகளும் ஆகி விடுகின்றனர்.  புலனடக்கத்தை
இழந்து மனிதர்களாக இல்லாதும் போகிறார்கள்.

     நோயுற்றிருக்கும் சமயத்தில் இதை    நான் எழுதுவதால் நான்
கூறியிருப்பவைகளை யாரும் அலட்சியமாகக்  கருதிவிட வேண்டாம்.
என் நோய்களுக்குக் காரணம் என்ன    என்பதை நான் அறிவேன்.
அவைகளுக்கு நானே பொறுப்பாளி என்பதையும்  நன்றாக அறிந்தே
இருக்கிறேன். அப்படி அறிந்திருப்பதனாலேயே   நான் பொறுமையை
இழந்துவிடவில்லை. உண்மையில் அவை       எனக்குப் பாடங்கள்
என்பதற்காகக் கடவுளுக்கு       நன்றி செலுத்தினேன். ஏராளமான
மருந்துகளைச்            சாப்பிடும் ஆசையை எதிர்த்தும் வெற்றி
பெற்றிருக்கிறேன். என் பிடிவாதம்       அடிக்கடி டாக்டர்களுக்குச்
சங்கடமாக       இருந்திருக்கிறது என்பதை அறிவேன். அவர்களும்
அன்புடன்       சகித்துக் கொள்ளுகிறார்கள்; என்னைக் கைவிட்டு
விடுவதில்லை.

     என்றாலும்,  விஷயத்தை விட்டு நான் நெடுந்தூரம் போய்விடக்
கூடாது.          மேற்கொண்டும் கதையைக் கூறுவதற்கு முன்னால்
வாசகருக்கு எச்சரிக்கையாக ஒன்று சொல்ல    விரும்புகிறேன். இந்த
அத்தியாயத்தைப்     படித்துவிட்டு ஜஸ்ட் என்பவர் எழுதியிருக்கும்
புத்தகத்தை வாங்குகிறவர்கள், அதில் கூறப்பட்டிருப்பது    எல்லாமே
வேத வாக்கு என்று எடுத்துக் கொண்டுவிடக்கூடாது.   ஓர் ஆசிரியர்
எப்பொழுதுமே ஒரு விஷயத்தில்        ஓர் அம்சத்தை மாத்திரமே
எடுத்துக்காட்டுவார். ஆனால், ஒரே    விஷயத்தைக் குறைந்தது ஏழு
வேவ்வேறு           நிலைகளிலிருந்தும் காண முடியும். எல்லாமே
அவையவைகளின் அளவில்       சரியானவையாகவும் இருக்கலாம்.
ஆனால் அவை அனைத்தும் அதே சமயத்தில், அதே சந்தர்ப்பத்தில்
சரியாக இல்லாமலும் இருக்கக் கூடும். அதோடு  அநேக புத்தகங்கள்
நிறைய       விற்க வேண்டும் என்பதற்காகவும்,    பேரும் புகழும்
சம்பாதித்துக் கொள்ளுவதற்காகவும் எழுதப்படுகின்றன.   இத்தகைய
புத்தகங்களைப் படிக்கிறவர்கள்      பகுத்தறிவோடு படிப்பார்களாக.
அவற்றில்   கூறப்பட்டிருக்கும் ஏதாவது ஒரு முறையைப் பரீட்சித்துப்
பார்ப்பதற்கு முன்னால்             கொஞ்சம் அனுபவமுள்ளவரின்