பக்கம் எண் :

கூலிகளின் ஒதுக்கலிடங்கள்345

Untitled Document
அப்பொருளே           தென்னாப்பிரிக்காவில் ‘கூலி’ என்பதற்குக்
கொடுக்கப்படுகிறது. ‘கூலி’களுக்குக்       குடியிருக்கக் கொடுக்கப்
பட்டிருக்கும் இடங்கள்            ‘கூலி’ ஒதுக்கலிடங்கள்’ என்று
சொல்லப்படுகின்றன.             அப்படிப்பட்ட ஓர் ஒதுக்கலிடம்
ஜோகன்னஸ்பர்க்கில் இருக்கிறது. ஆனால்,  ஒதுக்கலிடமுள்ள மற்ற
இடங்களில்     இந்தியருக்குச் சாசுவதக் குடிவார உரிமை இருப்பது
போல் இங்கே இல்லை.        ஜோகன்னஸ்பர்க்கில் அப்பகுதியில்
இந்தியர்,  மனைகளை 99 வருடக்         குத்தகைக்கு  வாங்கிக்
கொண்டிருக்கின்றனர். அப்பகுதியில் ஜனத்தொகை  அதிகரிப்பதற்கு
ஏற்றாற்போல விஸ்தீரணம்     அதிகரிக்கப்படவில்லை. ஆகையால்,
அவ்விடத்தில்    மக்கள் நெருக்கமாகவே வசிக்க நேர்ந்தது. அரை
குறையான வகையில் கக்கூசுகளைச்       சுத்தம் செய்ய ஏற்பாடு
செய்திருந்ததைத் தவிர முனிசிபாலிடி        அப் பகுதியில் வேறு
எந்தவிதமான சுகாதார வசதியும் செய்யவே இல்லை. அங்கே நல்ல
பாட்டைகளோ,                 விளக்குகளோ இல்லை. அங்கே
குடியிருந்தவர்களின் நலனிலேயே இது         சிரத்தையில்லாமல்
இருந்தபோது, அப் பகுதியின் சுகாதாரத்தை     அது பாதுகாக்கும்
என்பதற்கு இடமே இல்லை.         அங்கே குடியிருந்தவர்களோ,
நகரசபையின் சுகாதார        விதிகளையும் சுகாதாரத்தையும் பற்றி
ஒன்றுமே அறியாதவர்களாகையால்,   நகரசபையின் உதவி அல்லது
கண்காணிப்பு இல்லாமல்        அவர்கள் எதுவும் செய்துகொள்ள
முடியாது.    தென்னாப்பிரிக்காவுக்குச் சென்ற இந்தியர், ராபின்ஸன்
குருஸோக்கலாக இருந்திருப்பார்களாயின்,    அவர்கள் கதை வேறு
விதமாக இருந்திருக்கும்.    ஆனால், ராபின்ஸன் குருஸோக்களாகக்
குடியேறிய நாடு ஒன்றேனும்   உலகில் இருப்பதாக நாம் அறியோம்.
பொதுவாகச் செல்வத்தையும் வர்த்தகத்தையும்     தேடிக்கொண்டே
மக்கள்      வெளிநாடுகளில் போய்க் குடியேறுகிறார்கள். ஆனால்,
தென்னாப்பிரிக்காவுக்குச் சென்ற இந்தியரில்  பெரும்பாலானவர்கள்,
ஒன்றும்          தெரியாத பரம ஏழை விவசாயிகள். ஆகையால்,
அவர்களுக்கு அளிக்க வேண்டிய எல்லாக்  கவனமும் பாதுகாப்பும்
அவர்களுக்குத் தேவை. அவர்களைத் தொடர்ந்து அங்கே  சென்ற
வியாபாரிகளும், படித்த இந்தியரும் மிகச் சிலரே.

     நகரசபையின் அக்கிரமமான அசிரத்தையும்,  அப் பகுதியில்
குடியிருந்த இந்தியரின்         அறியாமையும் சேர்ந்து அவர்கள்
குடியிருந்த இடத்தை முற்றும் சுகாதாரக்   கேடானதாக்கி விட்டன.
அப்பகுதியின் நிலைமை       அபிவிருத்தியடையும்படி நகரசபை
ஒன்றுமே செய்யாமல் இருந்ததோடு,        தங்களுடைய சொந்த
அசிரத்தையினால் ஏற்பட்ட  சுகாதாரக் கேட்டை, அப்பகுதியையே
அழித்து விடுவதற்கு ஒரு சாக்காகவும்   உபயோகித்துக்கொண்டது.