பக்கம் எண் :

392சத்திய சோதனை

Untitled Document
எந்த முயற்சியுமே எனக்குத் தேவையில்லை.

     உப்பை அடியோடு விட்டுவிட வேண்டிய சந்தர்ப்பமும் எனக்கு
ஏற்பட்டது. இந்தத் தடையைப்      பத்து ஆண்டுகாலம் தொடர்ந்து
அனுசரித்து வந்தேன். மனிதனுடைய    உணவில் உப்பு அவசியமான
பொருள் அல்ல என்று         சைவ உணவைப் பற்றிய ஏதோ ஒரு
புத்தகத்தில் படித்தேன். உப்பு இல்லாத  உணவே உடலின் சுகத்திற்கு
நல்லது என்றும்             அதில் கூறப்பட்டிருந்தது. இதிலிருந்து
பிரம்மச்சாரிக்கு        உப்பில்லாத உணவு நல்லது என்ற முடிவுக்கு
வந்தேன். பலவீனமான                உடம்பைக் கொண்டவர்கள்
பருப்புவகைகளைத்               தவிர்க்க வேண்டும் என்று நான்
படித்திருந்ததோடு அதன் உண்மையை அறிந்துமிருந்தேன். எனக்கோ,
பருப்பு வகைகளில் அதிகப்பிரியம்.

     ரண சிகிச்சைக்குப்               பிறகு குணமடைந்து வந்த
கஸ்தூரிபாய்க்குத் திரும்பவும்    ரத்த நஷ்டம் ஏற்பட ஆரம்பித்தது.
இந்த நோய் சுலபத்தில் குணமாகாது என்றும்      தோன்றிற்று. நீர்ச்
சிகிச்சையினாலும்      குணம் ஏற்படவில்லை. என்னுடைய சிகிச்சை
முறைகளை அவள் எதிர்க்கவில்லையாயினும்   அவற்றில் அவளுக்கு
அவ்வளவாக  நம்பிக்கையில்லை. ஆனாலும் வெளி வைத்திய உதவி
வேண்டும் என்று        அவள் கேட்கவே இல்லை. ஆகவே, என்
வைத்திய முறைகளெல்லாம்          பயன்படாது போய்விட்டதால்
உப்பையும் பருப்புவகைகளையும் தள்ளும்படி   அவளைக் கேட்டுக்
கொண்டேன். தக்க ஆதாரங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி நான்
எவ்வளவோ விவாதித்துப் பார்த்தும்      இதற்கு அவள் சம்மதிக்க
மறுத்து விட்டாள். கடைசியாக       அவள் எனக்கு ஒரு சவாலும்
விட்டாள். உப்பையும் பருப்பையும் விட்டுவிடுமாறு எனக்கு யாராவது
யோசனை கூறினாலும் அவற்றை   என்னாலும் விட்டுவிட முடியாது
என்றாள். இதைக் கேட்டு நான் வருந்தினேன்.    என்றாலும் அதே
சமயத்தில் மகிழ்ச்சியும் அடைந்தேன்.      அவளிடம் எனக்குள்ள
அன்பைப் பொழிவதற்கு       ஒரு வாய்ப்புக் கிடைத்தது என்பதே
மகிழ்ச்சிக்குக் காரணம். நான் அவளிடம் சொன்னேன்:  “நீ தவறாக
நினைத்து விட்டாய். நான் நோயுற்று இருந்து,         இவற்றையும்
மற்றவைகளையும்        தவிர்த்து விடுமாறு வைத்தியர் யோசனை
கூறினால், கொஞ்சமும் தயங்காமல் அப்படியே    செய்வேன். அது
போகட்டும் வைத்திய ஆலோசனை எதுவும்     இல்லாமலேயே, நீ
விட்டாலும் விடாது போனாலும், உப்பையும்   பருப்புக்களையும் ஓர்
ஆண்டுக்கு நான் கைவிடுகிறேன்.”

     இதைக் கேட்டதும் அவள்    திடுக்கிட்டுப் போனாள். மிகுந்த
துயரத்தோடு அவள் கூறியதாவது:         “தயவு செய்து என்னை
மன்னித்துவிடுங்கள். உங்கள் இயல்பு   தெரிந்திருந்தும் நான் இப்படி
உங்களுக்குக் கோபம்           மூட்டியிருக்கக்கூடாது. உப்பையும்