பக்கம் எண் :

ஆசிரமத்தில் கண்ணோட்டம் 515

Untitled Document
பொதுவான ஒரே சமையல்.        ஆசிரமத்தைப் புது இடத்திற்குக்
கொண்டு           போய்விடுவது என்ற யோசனை என்னுடையது.
வழக்கம்போலவே அந்த யோசனையை மகன்லால்      நிறைவேற்றி
வைத்தார். குடியிருக்க நிரந்தரமான   வீடுகளைக் கட்டி முடிப்பதற்கு
முன்னால், நாங்கள் எவ்வளவோ       சிரமப்பட வேண்டியதாயிற்று.
மழைக் காலம் வரும் சமயம், சாப்பாட்டுக்கு வேண்டிய சாமான்களை,
நான்கு மைல்களுக்கு அப்பால் இருக்கும்     அகமதா பாத்திலிருந்து
வாங்கி வர வேண்டும்.         அந்நிலம் வெகுகாலமாகத் தரிசாகக்
கிடந்ததாகையால், அங்கே           பாம்புகள் அதிகம். இத்தகைய
நிலைமையில் அங்கே சிறு    குழந்தைகளையும் வைத்துக் கொண்டு
வசிப்பதென்பது பெரிய   ஆபத்தாகும். எங்களில் யாரும் இத்தகைய
விஷ ஜந்துக்களைப் பற்றிய பயத்தை    விட்டொழித்து விட்டவர்கள்
அல்ல; இப்பொழுதும் நாங்கள் அவற்றிற்குப் பயப்படாதவர்கள் அல்ல
என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன்.         ஆயினும், பாம்புகளைக்
கொல்வதில்லை என்பது எங்கள் பொதுவான விதி.

     விஷ ஜந்துக்களைக் கொல்வதில்லை  என்ற விதி, போனிக்ஸ்,
டால்ஸ்டாய் பண்ணை,           சபர்மதி ஆசிரமம் ஆகியவற்றில்
பெரும்பாலும்,       அனுசரிக்கப்பட்டு     வந்தது. இந்த இடங்கள்
ஒவ்வொன்றிலும்           தரிசாகக் கிடந்த நிலத்திலேயே நாங்கள்
குடியேறினோம். என்றாலும், பாம்பு கடித்ததனால்   எங்களில் யாரும்
இறந்ததில்லை. கருணைக் கடலான கடவுளின்  கிருபையையே இதில்
நான் நம்பிக்கைக்      கண்ணோடு காண்கிறேன். இதைக் கொண்டு,
கடவுள்     பார பட்சமுடையவராக இருக்கவே   முடியாது என்றும்,
மனிதரின் சாமான்ய           விஷயங்களிலெல்லாம் தலையிட்டுக்
கொண்டிருக்க கடவுளுக்கு     அவகாசம் இருக்குமா என்றும் யாரும்
குதர்க்கம் பேசக்  கிளம்பிவிட வேண்டாம். இவ்விஷயத்தில் இருக்கும்
உண்மையை, எனக்கு ஏற்பட்ட ஒரே மாதிரியான இந்த அனுபவத்தை,
வேறுவிதமாக நான் சொல்லுவதற்கு இல்லை.    கடவுளின் வழிகளை
விவரிக்க மனிதனின் மொழிகள் தகுந்தவை அல்ல.   அவர் வழிகள்
விவரிக்க முடியாதவை,    பகுத்தறிய முடியாதவை - இயலாதவை -
என்ற உண்மையை         நான் உணருகிறேன். ஆனால், அவற்றை
விவரித்துக் கூறிவிட மனிதன் துணிவானாயின், அதற்கு   அவனுடைய
தெளிவில்லாத பேச்சைத் தவிர வேறு         எந்தவித சாதனமுமே
கிடையாது. கொல்வதில்லை என்ற வழக்கத்தை அநேகமாக, ஒழுங்காக
நாங்கள் அனுசரித்து வந்திருந்தும் இருபத்தைந்து     ஆண்டுகளாகப்
பாம்புகளால்      எங்களுக்குத் தீமை ஏற்பட்டதே இல்லை என்பது,
கடவுள் அருளேயன்றி      அதிர்ஷ்டவசமானதொரு சம்பவம் அல்ல
என்று கருதுவது ஒரு    மூட நம்பிக்கையாக இருந்தாலும், அந்த மூட