பக்கம் எண் :

552சத்திய சோதனை

Untitled Document
கூட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு எந்த  வேலைத் திட்டமும்
எப்பொழுதும் எனக்குத் தோன்றவில்லை. ரௌலட் மசோதா முடிவில்
சட்டமாக்கப்பட்டு    விடுமானால், அதை எதிர்த்துச் சாத்விகச் சட்ட
மறுப்புச் செய்வது எப்படி என்பது     எனக்கு விளங்கவே இல்லை.
சட்டத்தை மறுப்பதற்கு அரசாங்கம் சந்தர்ப்பம்      அளித்தால்தான்
அச்சட்டத்தை ஒருவர் மீற முடியும்.    அதில்லாது போனால், மற்றச்
சட்டங்களை நாம்       சாத்விக முறையில் மீற முடியுமா? அப்படிச்
செய்வதாயின்      அதற்கு எந்த இடத்தில் வரம்பை நிர்ணயிப்பது?
இதையும் இதுபோன்ற       பல விஷயங்களையும் குறித்து நாங்கள்
விவாதித்தோம்.

     விஷயத்தை நன்கு பரிசீலனை செய்து முடிவுக்கு வருவதற்காக
ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்கார், தலைவர்கள்     அடங்கிய சிறு கூட்டம்
ஒன்றைக் கூட்டினார். அதில்           முக்கியமான பங்கெடுத்துக்
கொண்டவர்களில்            ஸ்ரீ விஜயராகவாச்சாரியாரும் ஒருவர்.
சத்தியாக்கிரக சரித்திரத்தின் நுட்பமான       விவரங்கள் அடங்கிய
விரிவான    குறிப்பு நூல் ஒன்றை நான் தயாரிக்க வேண்டும் என்று
அவர் யோசனை கூறினார்.          அந்த வேலை என் சக்திக்குப்
புறம்பானது என்பதை உணர்ந்தேன். அதை அவரிடம்   தெரிவித்தும்
விட்டேன். இந்த                 ஆலோசனைகளெல்லாம் நடந்து
கொண்டிருக்கையில், ரௌலட்மசோதா சட்டமாகப் பிரசுரமாகிவிட்டது
என்ற செய்தி கிடைத்தது.   அதைப்பற்றி யோசித்தவாறே அன்றிரவு
தூங்கி விட்டேன். மறுநாள் அதிகாலையில் வழக்கமாக  எழுவதற்குக்
கொஞ்சம்        முன்பாகவே    எழுந்துவிட்டேன். தூக்கத்திற்கும்
விழிப்பிற்கும் இடையேயுள்ள நிலையில்       நான் இருக்கும்போது
திடீரென்று எனக்கு ஒரு யோசனை தோன்றியது.    அது கனவைப்
போன்றே இருந்தது.       காலையில் அதன் விவரம் முழுவதையும்
ராஜ கோபாலச்சாரியாரிடம் கூறினேன்:

     “நேற்றிரவு கனவில் ஒரு          யோசனை வந்தது. பொது
ஹர்த்தாலை            நடத்த வேண்டும் என்று தேச மக்களைக்
கேட்டுக்கொள்ளுவது என்பதே அது.           ஆன்மத் தூய்மை
செய்துகொள்ளும் ஒரு      முறையே சத்தியாக்கிரகம். நம்முடைய
போராட்டமோ, ஒரு புனிதமான போராட்டம்.    ஆகையால், அதை
ஆன்மத் தூய்மை செய்து     கொள்ளுவதோடு ஆரம்பிப்பதே சரி
என்று எனக்குத் தோன்றுகிறது.           எனவே, இந்திய மக்கள்
எல்லோரும்    அன்று தங்கள் வேலைகளையெல்லாம் நிறுத்திவிட்டு
உபவாசம் இருந்து     பிரார்த்தனை செய்யட்டும். முஸ்லிம்கள் ஒரு
நாளுக்கு மேல் படினி விரதம் இருக்கமாட்டார்கள். ஆகவே, பட்டினி
விரதம் இருக்கும் நேரம்    21 மணி என்று இருக்கவேண்டும். இந்த
நமது கோரிக்கையை     எல்லா மாகாணங்களுமே ஏற்றுக் கொண்டு
நடத்தும் என்று சொல்லுவதற்கில்லை.  ஆனால், பம்பாய், சென்னை,
பீகார், சிந்து