பக்கம் எண் :

574சத்திய சோதனை

Untitled Document
அந்த அழைப்பில் கையொப்பமிட்டிருந்தவர்களில்     காலஞ்சென்ற
ஹக்கீம் அஜ்மல் கான் சாகிபும்,    ஸ்ரீ ஆஸப் அலியும் இருந்தனர்.
காலஞ்சென்ற சுவாமி  சிரத்தானந்தஜியும் அம்மகாநாட்டுக்கு வருவார்
என்று கூறப்பட்டது.         அந்த வருடம் நவம்பரில் கூடவிருந்த
மகாநாட்டிற்கு அவர் உபதலைவராக இருப்பது என்று இருந்ததாகவும்
எனக்கு ஞாபகம். கிலாபத்   விஷயமாகச் செய்யப்பட்ட நம்பிக்கைத்
துரோகத்தினால் ஏற்பட்ட நிலைமையைக் குறித்தும்,  யுத்த சமாதான
வைபவங்களில் ஹிந்துக்களும்   முஸ்லிம்களும் கலந்துகொள்ளுவதா
என்பதைப் பற்றியும் அம்மகாநாடு விவாதிக்க இருந்தது.  அழைப்புக்
கடிதத்தில் இன்னுமொன்றும் கூறியிருந்தார்கள். மகாநாட்டில் கிலாபத்
விஷயம் மாத்திரமே அன்றிப் பசுப் பாதுகாப்பைப்பற்றிய விஷயமும்
விவாதிக்கப்படும் என்றும் கூறியிருந்தனர்.    பசுப் பிரச்சனையைக்
குறித்து இப்படிக் குறிப்பிடப்பட்டிருந்தது எனக்குப்  பிடிக்கவில்லை.
அழைப்புக்குப் பதிலளித்து நான்  எழுதிய கடிதத்தில் மகாநாட்டுக்கு
வருவதற்கு என்னாலான      முயற்சியைச் செய்வதாகக் கூறினேன்.
அதோடு, இந்த இரண்டு விஷயங்களையும் ஒன்றாகக் கவனிக்கவோ
அல்லது பேரம் பேசும் உணர்ச்சியுடன்     அவற்றைக் கலப்பதோ
சரியல்ல என்றும்,      அதனதன் தகுதிக்கு ஏற்பத் தனித்தனியாக
இவ்விஷயங்களை விவாதித்து    முடிவுக்கு வரவேண்டும் என்றும்
எழுதினேன்.

     இவ்விதமான எண்ணங்களோடேயே நான் அம்மகாநாட்டிற்குச்
சென்றேன். அதற்குப்           பின்னால் நடந்த மகாநாடுகளுக்கு
பத்தாயிரக்கணக்கானவர்கள்  வந்திருந்தார்கள். அவைகளைப் போல்
இம்மகாநாடு இல்லாவிட்டாலும், இதற்கும்  அநேகர் வந்திருந்தார்கள்.
காலஞ்சென்ற சுவாமி சிரத்தானந்தஜியும் மகாநாட்டுக்கு வந்திருந்தார்.
மேலே சொன்ன விஷயத்தைக் குறித்து   அவருடன் விவாதித்தேன்.
என்னுடைய வாதத்தை    அவரும் ஏற்றுக்கொண்டார். மகாநாட்டில்
அதை     எடுத்துக்கூறும் வேலையை அவர் எனக்கே அளித்தார்.
இதே போலக்   காலஞ்சென்ற ஹக்கீம் சாகிப்பிடமும் இதைப் பற்றி
விவாதித்தேன்.மகாநாட்டின் முன்பு நான் பேசியபோது கூறியதாவது:
“கிலாபத் பிரச்சனைக்குள்ள  அடிப்படை, நியாயமானது, நீதியானது
என்று நம்புகிறேன். அப்படி இருக்குமாயின் அரசாங்கம் மோசமான
அநீதியையே இதற்கு  முன்னால் செய்திருக்கிறது என்றால், கிலாபத்
தவறுக்குப்        பரிகாரம் செய்ய வேண்டும் என்று கோருவதில்
முஸ்லிம்களுடன்              ஒன்றுபட்டு நிற்க  ஹிந்துக்களும்
கடமைப்பட்டிருக்கிறார்கள்.   கிலாபத் பிரச்னைக்கு ஹிந்துக்களின்
ஆதரவைப்      பெறுவதற்கு விலை கொடுப்பதுபோலப் பசுவைக்
கொல்லுவதில்லை என்று      முஸ்லிம்கள் சொல்லுவது எவ்விதம்
சரியல்லவோ, அதேபோல