பக்கம் எண் :

பசுப் பாதுகாப்புக்கு பதிலாகக் கிலாபத் 575

Untitled Document
முஸ்லிம்களுடன் இதில் ஒரு சமரசத்திற்கு வர    இச்சந்தர்ப்பத்தை
ஹிந்துக்கள்   பயன்படுத்திக் கொள்ளுவதும் அழகல்ல. ஆகையால்,
இதன் சம்பந்தமாகப்       பசுப் பிரச்னையைக் கொண்டு வருவதே
முறையாகாது. ஆனால், ஹிந்துக்களின் மத உணர்ச்சியை  மதித்தும்,
அக்கம்பக்கத்திலிருப்பவர்கள்         ஒரே நாட்டின் மக்கள் என்ற
வகையில்              அவர்கள்பால் கொள்ள வேண்டிய கடமை
உணர்ச்சியினாலும்,  முஸ்லிம்கள்  தாங்களாகவே விரும்பிப் பசுவைக்
கொல்லுவதை  நிறுத்திவிடுவார்களானால்,     அது முற்றும் வேறான
விஷயம். இது          முஸ்லிம்களுக்குப் பெருந்தன்மையாவதோடு
அவர்களுக்கு அதிகக் கௌரவத்தையும் அளிக்கும்.  இவ்விதம் ஒரு
சுயேச்சையான முடிவுக்கு     வருவது முஸ்லிம்களின் கடமை. இது
அவர்கள் நடத்தையின்     கௌரவத்தையும் உயர்த்தும். ஆனால்,
அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்குத்    தாங்கள் ஆற்ற வேண்டிய
கடமை என்ற வகையில் முஸ்லிம்கள்,    பசுக்களைக் கொல்லுவதை
நிறுத்துவதாயிருந்தால்      கிலாபத் விஷயத்தில்      ஹிந்துக்கள்
அவர்களுக்கு உதவி செய்தாலும்,     செய்யாவிட்டாலும் அவ்விதம்
செய்ய வேண்டும்.            நிலைமை இதுவாகையால், இவ்விரு
விஷயங்களையும்        தனித்தனியாக விவாதித்து முடிவுக்கு வர
வேண்டும். இந்த      மகாநாட்டில் கிலாபத் பிரச்னையைக் குறித்து
மாத்திரமே விவாதிக்க வேண்டும்.”

     மகாநாட்டிற்கு வந்திருந்தவர்களுக்கு  என்னுடைய வாதம் சரி
என்று பட்டது.      இதன் பலனாக,    பசுப் பாதுகாப்பு விஷயம்
இம்மகாநாட்டில் விவாதிக்கப்படவில்லை.     ஆனால், என்னுடைய
எச்சரிக்கையையும்        பொருட்படுத்தாமல் மௌலானா அப்துல்
பாரிசாகிப், “நமக்கு ஹிந்துக்கள் உதவி செய்தாலும் உதவி செய்யாது
போனாலும்    சரி, நாம் ஹிந்துக்களின் நாட்டினர் என்ற வகையில்,
ஹிந்துக்களின் மத உணர்ச்சியை மதித்து  முஸ்லிம்கள் பசுக்களைக்
கொல்வதை      விட்டுவிட வேண்டும்”     என்றார். பசுக்களைக்
கொல்லுவதை அவர்கள்     அடியோடு விட்டுவிடுவார்கள் என்றே
அநேகமாகத் தோன்றியது.

     கிலாபத் தவறு     பற்றிய         விஷயத்துடன் பாஞ்சால
விஷயத்தையும்        பிணைத்துவிட வேண்டும் என்று சிலர் ஒரு
யோசனை கூறினார்கள். அந்த யோசனையை நான்    எதிர்த்தேன்.
பாஞ்சாலப் பிரச்னை உள்நாட்டு விஷயமாகையால்,  யுத்த சமாதான
வைபவங்களில்      கலந்து கொள்ளுவதா, இல்லையா என்று நாம்
முடிவுக்கு வருவதற்கு இது நமக்குப் பொருத்தமானதாகாது என்றேன்.
கிலாபத் பிரச்னை, யுத்த சமாதான ஒப்பந்தம் காரணமாக நேரடியாக
எழுந்துள்ளது. அதில் போய்   உள்நாட்டு விஷயத்தையும்  கலந்து
விடுவோமாயின்,      பகுத்தறியாத           பெருங் குற்றத்தை
செய்தவர்களாவோம் என்றேன். என்னுடைய வாதத்தை