தாங்கினார். இக்கலகத்தின்போது விருப்பாச்சியை அடுத்த
பகுதிகளில் கடும் சண்டைகள் நிகழ்ந்தன. கலகத்தின் இறுதியில்
(1801) ஆங்கிலேயரே வெற்றி பெற்றனர். கோபால நாயக்கரும்,
அவரைப் பின்பற்றிச் சென்றவர்களும் ஆங்கிலேயர்களால்
பிடிக்கப்பட்டு, தூக்கிலிடப்பட்டனர். ஆங்கிலேயருக்குப்
பணியாமல், அவர்களை எதிர்த்து இறதிவரை போராடித்
தென்னிந்தியக் கலகத்தில் விருபாச்சியின் கோபால நாயக்கர்
மிக்க புகழ் பெற்றார்.
பழனி நகர் 1886ஆம் ஆண்டு ஓரு நகராட்சி ஆயிற்று.
ஆரம்பத்தில் கோவை மாவட்டத்தின் பகுதியாக விளங்கிய
இந்நகர் பின்னர் மதுரை மாவட்டத்தின் பகுதியாயிற்று. பழனி
வட்டத்தின் தலைமையிடமாக விளங்கும் இந்நகரின் 1981ஆம்
அண்டு மக்கள் தொகை 64,400 ஆகும்.
பழனி நகரைப்பற்றிய
புராண வரலாறு பின்வருமாறு
உள்ளது.
ஓரு காலத்தில் நாரதர் சிவபெருமானுக்கு
மாதுளம் பழம்
ஒன்றைக் கொடுத்ததாகவும், சிவபெருமானின் அருகிலிருந்த இவர்
திருக்குமாரர்களான கணபதியும், முருகனும் அப்பழத்தை ஏக
காலத்தில் கேட்கவே, “எவர் இவ்வுலகை முதலாவது வலம்
வருகிறார்களோ, அவருக்குத்தான் இப்பழம்” என்று சிவன்
கூறினார் என்றும், கணபதி தம் தாய் தந்தையே உலகம் என
அவர்களைச் சுற்றிவிட்டுப் பழத்தைப் பெற்றுக்கொண்டார் என்றும்,
தமக்குப் பழம் கிடைக்காததால் முருகன் தவக்கோலம் பூண்டு
பழனியில் அமர்ந்தார் என்றும், இதனால் சிவனும் உமாதேவியும்,
தங்கள் குமாரனின் கோபம் தணிய ‘ஞானப் பழமாக நீ இருக்கும்
பொழுது உனக்கு வேறு பழம் எதற்கு’ என்று கூறி அன்பு
பாராட்டினார்கள் என்றும் கூறப்படுகிறது. முருகன் பெற்ற
பெயரே, மலைக்கும் ஊருக்கும் ‘பழம் நீ’ என் வழங்கப்பட்டுப்
பின் அச்சொல் மருவி ‘பழநி’ அல்லது பழனி என்றாயிற்று
எனப்படுகிறது.
(பழனம் என்னும் வயல்களால் இப்பகுதி சூழப்பட்டிருந்ததால்,
இப்பகுதி பழனம் என்றழைக்கப்பட்டுப் பின்னர் பழனி
|