பக்கம் எண் :

222தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

கோவில் ஆகியவை பழனி நகரிலுள்ள இதர முக்கிய
கோவில்களாகும்.

இடும்பன் கோவில்

திண்டுக்கல்-பழனி சாலையில் பழனி நகருக்குள் நுழையுமுன்
அருள்மிகு பழனியாண்டவர் கலைக் கல்லூரிக்கு அருகில் இடும்பன்
கோவில்
இருக்கிறது. புராண அடிப்படையில் பழனி மலையும்,
பழனிமலைக்கு அருகிலுள்ள இடும்பன் மலையும் சிவகிரி, சக்திகிரி
என அழைக்கப்பட்டன. இடும்பன் என்ற அசுரன் இம்மலைகளை
அகத்திய முனிவருக்காக கைலாயத்திலிருந்து பொதிகைக்குக்
காவடிபோல் கட்டித் தூக்கிகொண்டு சென்றதாகவும், செல்லும்
வழியில் இப்போது இடும்பன் மலை இருக்கும் இடத்தில்
களைப்பினால் இறக்கி வைத்ததாகவும், தன் பெற்றோர்களிடம்
கோபமுற்று முருகன் அமர்ந்தபின் மலையைத் தூக்கமுடியாமல்
போகவே இடும்பனுக்கும் முருகனுக்கும் ஏற்பட்ட ஒரு போரில்
இடும்பன் இறந்ததாகவும் இடும்பனின் மனைவி இடும்பியின்
முறையீட்டால் மீண்டும் இடும்பன் உயிர் பெற்றார் என்றும்
புராணம் கூறுகிறது. இடும்பன் இரு வரங்களினால்
பழனிமலையில் இடும்பன் சந்நிதி என்ற இடத்தில் வாயில்
காவலனாக
இடம் பெற்றான் என்றும், இரு மலைகளையும்
தான் காவடிபோல் எடுத்து வந்தது போன்று காவடியுடன் வரும்
பக்தர்கள் முருகனின் அருள்பெற வேண்டும் என்று வேண்டினார்
என்றும் புராண வாயிலாக அறியப்படுகிறது.

இப்பொழுது இடும்பன் மலையின் அடிவாரத்தில் இருக்கும்
கோவிலை விரிவுபடுத்தி அம்மலையின் உச்சியில் வழிபாட்டிற்கு
ஏற்பாடு செய்யும் நோக்கத்துடன், அம்மலையின்
அடிவாரத்திலிருந்து உச்சிக்குக் கற்படிகள் அமைக்கும் வேலை
நடைபெற்று வருகிறது. காவடியுடன் பழனிமலைக்கு வரும்
பக்தர்கள் முதலில் இடும்பன் கோவிலில் வழிபட்ட பின்னரே
முருகனது கோவிலுக்குச் செல்கின்றனர். இடும்பனின் நினைவால்
இடும்பன் மலைக்கருகில் இடும்பன் குளம் ஒன்று உள்ளது.