|
கோயில்களின் தரையமைப்பு
பொதுவாக எல்லா இந்துக் கோயிலும் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி
இருக்கும். சில
கோயில்கள் தெற்கு நோக்கியும் வடக்கு நோக்கியும்
அபூர்வமாக இருப்பதுண்டு. பொதுவாகக் கிழக்கு
அல்லது மேற்கு நோக்கியே
கோயில்களை அமைப்பது வழக்கம்.
கோயிற் கட்டடத்தின் தரையமைப்பு, அக நாழிகையை
(கருப்பக்கிருகத்தை)யும்
அதன்
முன்புறத்தில் சிறிய இடைகழியையும்
உடையது. கருப்பக்கிருகத்தைச் சார்ந்தஇடைகழிக்கு இடைநாழிகை
(அர்த்த
மண்டபம்) என்பது பெயர். அகநாழிகை (கருப்பக்கிருகம்)
பெரும்பாலும்
சதுரமான அமைப்புடையது. சில அகநாழிகைகள் நீண்ட சதுரமாக
இருப்பதும் உண்டு. சில
அகநாழிகைகள் நீண்ட அரைவட்டமாக
அமைந்திருக்கும்.
மிகச் சில, வட்ட வடிவமாக இருக்கும்.
படவிளக்கம்
1.
திருவுண்ணாழிகை (அகநாழிகை)யும் இடைநாழிகையும், சதுர அமைப்பு
திருவுண்ணாழிகைக்குக் கருப்பக்கிருகம் என்றும், இடைநாழிகைக்கு அர்த்த
மண்டபம் என்றும் பெயர்கள் வழங்குகின்றன.
2.
வட்டவடிமான அகநாழிகை, காஞ்சிபுரத்துச் சுரகரீசுவரர் கோயிலும்,
புதுக்கோட்டையைச் சேர்ந்த நார்த்தா மலை, மேல்மலையில் உள்ள
விஜயாலய சோழீசுவரமும், மதுரையை அடுத்த கள்ளழகர் கோயிலும்
இவ்விதத் தரையமைப்பையும் உடலமைப்பையும் கொண்டவை.
3.
பாறைக் கோயிலின் தரையமைப்பு, மகேந்திர வர்மன் காலத்துக்
குகைக்கோயில்கள் எல்லாம் பொதுவாக இந்த அமைப்பையுடையன.
|