பக்கம் எண் :

New Page 1

கட்டடக் கலை

39


 

4.    நீண்ட சதுரமுள்ள அகநாழிகை. யானைக் கோயிலின் தரையமைப்பு.

 

5.    நீண்ட அரைவட்டமுள்ள அகநாழிகை அமைப்பு. மாமல்லபுரத்துக்
கணேச ரதம் முதலியவை.

 

6.    பனைமலையில் (தென் ஆர்க்காட்டு மாவட்டம், விழுப்புரம் தாலுக்கா)
உள்ள பல்லவர் காலத்துக் கோயிலின் தரையமைப்பு. மத்தியில் உள்ள
அகநாழிகையைச் சூழ்ந்த நாற்புறமும் அகநாழிகைகள் இருக்கின்றன.

 

7.    காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் (இராஜ சிம்மேசுவரம்)
தரையமைப்பு. மத்தியில் உள்ள அகநாழிகையைச் சூழ்ந்து வேறு
அகநாழிகைகள் அமைந்துள்ளன.

 

     காஞ்சிபுரத்துக் கைலாசநாதர் கோயிலிலும் பனைமலைக் கோயிலிலும்
கருவறையைச் சார்ந்து வேறு சில கருவறைகளும், அமைக்கப்பட்டுள்ளன.
இவை இரண்டும் விதிவிலக்காக, அபூர்வமாக ஏற்பட்டவை.

 

     பல்லவ அரசர் காலம் வரையில். திருவுண்ணாழிகையும்
இடைநாழிகையும் (கருவறையும், அர்த்தமண்டபமும்) ஆகிய கட்டடங்களே
அமைக்கப்பட்டன. இவற்றைச் சூழ்ந்து வேறு மண்டபங்கள் பெரும்பாலும்
அமைக்கப்படவில்லை.

 

     கி. பி. 10ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, சோழ அரசர்கள் கருவறையைச்
சுற்றிலும் மண்டபங்களை அமைத்தனர். அன்றியும், அர்த்த மண்டபத்துக்கு
முன்பு இன்னொரு மகா மண்டபத்தையும் அமைத்தனர். ஏனென்றால், 10ஆம்
நூற்றாண்டுக்குப் பிறகு  நாயன்மார்கள், ஆழ்வார்கள் முதலிய மூர்த்தங்களை
அமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இவ்வாறு அகநாழிகையைச்
சூழ்ந்து சுற்று மண்டபங்களை