|
ஸ்ரீபோகம், ஸ்ரீவிசாலம் என்று சிற்ப நூல்கள் கூறுகிற கட்டடங்களில்
ஒன்றாகக்
கொகுடிக் கோயில்
இருக்கக் கூடும் என்று ஊகிக்கலாம்.
வட்டமான சிகரத்தை உடையது விஜயம் என்று பெயர் பெறும்
என்பதை
மேலே (கரக்கோயிலில்) கூறினோம். அந்த வட்டமான சிகரம் கர்ண
கூடத்துடன்
கரக்கோயில் (விஜயம்) விமானம்
அமையப் பெற்றால் ஸ்ரீபோகம் எனப் பெயர்பெறும் என்றும், அதுவே
நடுவில்
பத்ரவரிசையுடன் கூடியதானால்
ஸ்ரீவிசாலம் எனப் பெயர் பெறும்
என்றும் காமிகாகமம்1 கூறுகிறது. கொகுடிக் கோயில்
என்பது ஸ்ரீபோகம்
அல்லது ஸ்ரீவிசாலமாக
இருக்கக்கூடும் என்று கருதலாம்.
மணிக்கோயில்
மணிக்கோயிலின் அமைப்பைப் பற்றியும் நமக்கு ஒன்றும்
தெரியவில்லை. ஆயினும்,
எட்டுப்
பட்டை அல்லது ஆறு பட்டையான
சிகரத்தையுடைய கோயிலாக இருக்கக்கூடும்
என்று யூகிக்கலாம். சிற்ப
நூல்கள் ஸ்கந்த காந்தம் என்று கூறுகிற விமானக் கோயிலே
மணிக்கோயில் என்று கருதுவது
பொருத்தமாகத் தோன்றுகிறது.
1. செய்யுள் 54. ஏகபூமியாதி விதி படலம்.
|