பக்கம் எண் :

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் 134

  தெரிய
பசி
மயக்கக்
கனைப்புக்
கனைத்துச்
சென்னைத்
தார்
ரோட்டிலே
புல்
மேயும்
பிரபாவம்
காண்மினோ
-காண்மினோ!
 
     டி.கே. துரைஸ்வாமியும் சுந்தரராமசாமியும் தீவிரமான சோதனைப் படைப்புகளை ஆக்கி வந்தனர். வல்லிக் கண்ணன், எம்.வி. வெங்கட்ராம் கவிதைகள் எப்பவாவது இடம் பெற்றன. புதுசாகக் கவிதை எழுதத்தொடங்கியவர்களில் சண்முகம் சுப்பய்யாவையும் நீல பத்மனாபனையும் குறிப்பிட வேண்டும்.

     சோதனை ரீதியான புதுக்கவிதை என்ற தன்மையில் சுந்தரராமசாமியின் படைப்புகள் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன. கருத்தாழமும், புதுமையும், தனி அழகும், பரிகாச தொனியும் கொண்ட நல்ல கவிதைகள் அவை.

     ‘கொள்கை’ என்றொரு கவிதை--
 
  மேற்கே
ரொமாண்டிஸிஸம்
நாச்சுரலிஸம்
ரியலிஸம்
அப்பால்
இம்ப்ரஸனிஸம்
என் மனைவிக்கு
தக்காளி
ரஸம்

அப்பால்
ஸிம்பாலிஸம்
ஸர்ரியலிஸம்
மீண்டும்
வெறும்
ரியலிஸம்
அப்பால்
அதற்கும்
அப்பால்?