-காண்கிற காட்சிகளும், அவை அவனுள் எழுப்புகிற எண்ணங்களும் இதில் அழகாக விவரிக்கப்படுகின்றன. |
| காதடைக்கும் இரைச்சலுடன் டவுன் பஸ்கள் வரும் போகும் |
என்று ஆரம்பிக்கிறது கவிதை. இவ் இரு வரிகளும் ஊடே ஊடே வந்து கொண்டு ஒரு அழுத்தம் தரத் தவறவில்லை. நகரத்தின் பஸ் ஸ்டாப் வர்ணனை வருகிறது- |
| பணி புரிந்து மிகக் களைத்து மனைக்கே வழிதேடி வேர்வைத் துளி பல்லிளிக்க சோர்வோடு உடல் வளைத்து சுற்றி நிற்கும் ஒரு கும்பல்; பூத்துவிட்ட விழி குறுக்கி அத்திப்பூ டவுன் பஸ்ஸை அலுத்து நோக்கும் பிறிதொன்று; பழைய நட்பு பேச்சிலாளும்; புதிய நட்பு வலைவீசும் நட்பில்லா மனிதர்களோ செவி தீட்டி நெருங்கி நிற்பர்; செவிக்குணவு மட்டுமின்றி விழிக்குணவும் இருக்குமெங்கும் |
பலர் வாழ்வு பூராவும் ‘உழைத்துப் பெறுகின்ற வருவாயை ஒரு மூச்சில் விழுங்கிய கார்’ ‘நடுத்தரக் கார்’ டாக்ஸி ஆட்டோ அத்தனையும் வரும் போகும், ‘மனம்நீங்கி உருப்பெற்று உலவுகின்ற ஆசைகளாய்.’ இளைஞர், வஞ்சியர் அலங்காரத் தோற்றங்கள் பல ரகம். இவர்களிடையே நடக்கும் உணர்ச்சி நாடகங்கள்தான் எப்பேர்ப்பட்டவை? |
| கோடிவரை யோட்டிக் கள்ள விழி சுழற்றி நோக்கி நேர்நோக்கி யெதிர் நோக்கி நோக்கிப் பயனில்லை யெனத் தெளிந்து தீட்டிய இதழ் விரித் தோச்சி என்ன என்ன வாய்ச் சொற்கள் வண்ண வண்ணச் சிரிப்பொலிகள்; இளமை ‘போயிங்’ உணர்ச்சி வானில் பறக்கும் வேளையில் கிளம்புமொலிகள், அவ்வேளையிலே வஞ்சியிடம் எத்தனை மலர்ச்சி துள்ளல் துவளல் எத்தனை உணர்ச்சியின் வானவில் திரட்சி எத்தனை அருகில் வா எட்டி நில்; வஞ்சி நோக்கி வெடிப்போரிடம் |