பக்கம் எண் :

55  வல்லிக்கண்ணன்

           V

ஊருக்கு மேற்கே
ஊருணியில் கண்டவளை
ஆருக்கும் வாய்க்கா
அரம்பை என்று கனவென்று
சொல்லில் வளைந்திடுவேன்.
சோற்றுக்கு அலைக்காதீர்

         VI

கன்னி எழில் வேண்டாம்;
காதல் கதை வேண்டாம்;
சொன்னபடி
தேச
பக்தி எழுப்பிடுவாய்
என்றக்கால்,
அப்படியே, ‘ஆஹா
அடியேன் இதோ’ என்று
கல்லும் உயிர் பெற்று,
காலன் போல், நடமாட,
‘வெல்லு’, ‘வெல்லு’
என்று குத்தும்
வீறாப்புத் தார்க்குச்சி
எத்தனை வேணும், செய்து
இணையடியில் வைத்திடுவேன்.

         VII

சற்று பொறும் ஐயா
சங்கதியை சொல்லுகிறேன்;
இன்றைக்குக் காசு
இருக்கிறது;
இனிமேலே
என்றைக்கோ, எப்போதோ
எதிரில் எனைக் கண்டக்கால்
ஓடி ஒளியாதீர்!
உம்மிடம் நாம் கேட்கவில்லை

         VIII

இத்தனைக்கும் மேலே
இனி ஒன்று;
ஐயா நான்
செத்ததற்குப் பின்னால்
நிதிகள் திரட்டாதீர்!