பக்கம் எண் :

132பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்

New Page 1
‘‘சோழன் மகன் தன் தேர்ச்சக்கரத்தால் ஒரு பசுங்கன்றைக்
கொன்றுவிட்டான். அமைச்சர்களும் மற்றவர்களும் சேர்ந்து இச்செய்தியை
அரசனுக்குத் தெரியாமல் மறைத்துவிட்டனர். பல்லாண்டுகள் கடந்தபின்
எப்படியோ மன்னவனுக்குத் தெரிந்துவிட்டது. உடனே அவன் தன் மகன்மீது
தேர்ச்சக்கரத்தை யேற்றிக் கொன்றான். நீதி செய்வதற்குக் காலக்கெடு
இல்லை என்பதை மெய்ப்பிக்கவே இவ்வாறு செய்தான்’’ இதுவே
பழமொழியில் கூறப்படும் வரலாறு.
 
  ‘‘சால மறைத்துஓம்பிச் சான்றவர் கைகரப்பக்
காலை கழிந்ததன் பின்றையும்-மேலைக்
கறவைக் கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்
முறைமைக்கு மூப்புஇளமை இல்.
 

மிகவும் பாதுகாத்து அறிவுள்ள மந்திரிகள் ஒளித்துவிட்டதனால், அதிக
நாள் கடந்த பிறகும், முன்பு பசுவின் கன்றின்மேல் தேரைச் செலுத்திக்
கொன்ற தன் மகனைத் தந்தையும் தேரை ஓட்டிக் கொன்றான். (ஆகையால்)
நீதிக்கு அதிக நாள் குறைந்த நாள் என்ற எல்லையில்லை’’.

முல்லைக்குத் தேர் கொடுத்தவன் பாரிவள்ளல்; மயிலுக்குப் போர்வை
தந்தவன் பேகன் என்னும் வள்ளல்; இவர்கள் சங்க நூல்களில்
பாராட்டப்பட்டிருக்கின்றனர். கொடுப்பதையே கடமையாகக் கொண்டவர்கள்.
இன்னார்க்கு இன்னது கொடுக்க வேண்டும் என்று எண்ண மாட்டார்கள்.
‘‘பாத்திரம் அறிந்து பிச்சையிடு’’ என்ற பழமொழியை அவர்கள்
பின்பற்றமாட்டார்கள். யாருக்கு எது வேண்டுமானாலும் கொடுப்பார்கள்.
இவர்கள் செயலைக் ‘‘கொடை மடம்’’ என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன.

படர்வதற்கு ஆதரவில்லாமல் தனித்துத் தளர்ந்து கொண்டிருந்த ஒரு
முல்லைக்கொடியைக் கண்டான் பாரி