மிகவும் பாதுகாத்து அறிவுள்ள மந்திரிகள் ஒளித்துவிட்டதனால், அதிக
நாள்
கடந்த
பிறகும், முன்பு பசுவின் கன்றின்மேல் தேரைச் செலுத்திக்
கொன்ற தன்
மகனைத் தந்தையும்
தேரை ஓட்டிக் கொன்றான். (ஆகையால்)
நீதிக்கு அதிக நாள்
குறைந்த நாள் என்ற
எல்லையில்லை’’.
முல்லைக்குத் தேர் கொடுத்தவன் பாரிவள்ளல்; மயிலுக்குப் போர்வை
தந்தவன்
பேகன் என்னும் வள்ளல்; இவர்கள் சங்க நூல்களில்
பாராட்டப்பட்டிருக்கின்றனர்.
கொடுப்பதையே கடமையாகக் கொண்டவர்கள்.
இன்னார்க்கு இன்னது கொடுக்க வேண்டும்
என்று எண்ண மாட்டார்கள்.
‘‘பாத்திரம் அறிந்து பிச்சையிடு’’ என்ற பழமொழியை
அவர்கள்
பின்பற்றமாட்டார்கள். யாருக்கு எது வேண்டுமானாலும் கொடுப்பார்கள்.
இவர்கள்
செயலைக் ‘‘கொடை மடம்’’ என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன.
படர்வதற்கு ஆதரவில்லாமல்
தனித்துத் தளர்ந்து கொண்டிருந்த ஒரு
முல்லைக்கொடியைக் கண்டான் பாரி
|