|
நாள்தோறும் குறித்த நேரத்திலே கிடைப்பதாயினும், தன்னை
விரும்பாதார்
இல்லத்திலே
அவர்கள் உதவும் பொரிக்கறியோடு கூடிய சோறு
இனிமை தராது;
உண்டால் வேம்பு போலவே கசக்கும்’’. (பா.207)
இவைகள் விரும்பாதார்-மதியாதார்-பகைவர் இல்லத்திலே உணவுண்பது
தீமை
என்பதை எடுத்துக்
காட்டின. அவ்வாறு செய்வது மனிதத் தன்மையற்ற
செயல்;
மானங்கெட்ட நடத்தை என்பதையும் உணர்த்தின.
சாதி வேற்றுமை
நாலடியார் காலத்திலே தமிழ் நாட்டிலே சாதி வேற்றுமை
நிலைத்திருந்தது.
வருணாசிரம
தருமக் கொள்கைகள் வேரூன்றியிருந்தன.
பிறப்பினால் உயர்வு
தாழ்வு உண்டு என்ற கருத்து பரவியிருந்தது.
|