பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்3

உ.
இங்கண் சங்கதமுடன் இந்தியும் வந்தடர்ந்த
எந்தமிழ்இற எரியொடு நெய்யுற
அங்கண நின்னடி அணிந்தனெம் முடிமிசை
அறிவுரிமை பெற அடிமையெலாம் அற
(எங்கும்)
 
4. கடவுள் வழுத்து
பண் - (பந்துவராளி)
தாளம் - ஈரொற்று
ப.
இறைவா ஏனோ மறைவாய் இருப்பாய் - எந்நாளும்
து. ப.
பறைவாயிற் பற்றில்லிகள் பரமாநீ இ(ல்)லையென்றே
அறைகாலும் அமைந்துற்றாய் அஞ்செவியே உனக்கின்றோ
(இறைவா)
உ.
அறைவாய்ப் பூங்குழவி அன்னையின் பால்அருந்தினும்
அவளைக் காணாமைபோல் ஆனதேஎன் நிலைமை
நிறைவாய் எல்லாமாய் நீயெங்கும் இருக்கும்மெய்
நினைவுறுத்து கின்றாயோ நினையறியா தென்புலமை
(இறைவா)
 
5. இசைமாணவர் இறைவனை வேண்டல்
'லம்போதரா லகுமிகரா' என்ற மெட்டு
பண் - (மலகரி)         தாளம் - ஈரொற்று
ப.
அன்பே வடிவெனும் அறவா
து. ப.
இன்பே தரும் இசையறிவருள்
(அன்பே)