பக்கம் எண் :

2இசைத்தமிழ்க் கலம்பகம்

பனுவல்
2. கடவுளை வேண்டல்
'மாசில் வீணையும்' என்ற மெட்டு
பண் - (பூரிகலியாணி)
தாளம் - முன்னை
1
உலகம் யாவையும் உள்ளன வாக்கலும்
நிலைநி றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாய்தனித்
தலைவா உன்திருத் தாளில்எம் தலையே.
2
மருளுறும் இந்த மாநிலம் யாங்களே
தெருளுறும் வண்ணம் தீந்தமிழ்ப் பாணியால்
பொருளுறும் உன்றன் புகழேபு ரிந்தனம்
அருளுவாய் இன்றே அறமுது கடலே.
3
குலமொன் றாகியே கோவேஎம் தந்தையே
உலக ஆட்சியும் ஒன்றாக வோங்கியெம்
புலமை யன்பினாற் போரெது மின்றியே
நலமாய் வாழ்ந்திட நன்மதி யருளே.
3. இறைவணக்கம்
பண் - (பந்துவராளி)
தாளம் - முன்னை
ப.
எங்கும் நிறைந்த பொருளே - இன்றருளே
து. ப.
தன்கண் பூதம் ஐந்தும் தங்கும்படி விரிந்தும்
நுண்பொருளும் நுழைந்தும் நுண்ணியதின் நுணித்தும்
(எங்கும்)