|
உ. |
| இங்கண் சங்கதமுடன் இந்தியும் வந்தடர்ந்த | | எந்தமிழ்இற எரியொடு நெய்யுற | | அங்கண நின்னடி அணிந்தனெம் முடிமிசை | | அறிவுரிமை பெற அடிமையெலாம் அற (எங்கும்) |
|
|
4. கடவுள் வழுத்து |
|
பண் - (பந்துவராளி) தாளம் - ஈரொற்று |
ப. |
| இறைவா ஏனோ மறைவாய் இருப்பாய் - எந்நாளும் |
|
து. ப. |
| பறைவாயிற் பற்றில்லிகள் பரமாநீ இ(ல்)லையென்றே | | அறைகாலும் அமைந்துற்றாய் அஞ்செவியே உனக்கின்றோ (இறைவா) |
|
உ. |
| அறைவாய்ப் பூங்குழவி அன்னையின் பால்அருந்தினும் | | அவளைக் காணாமைபோல் ஆனதேஎன் நிலைமை | | நிறைவாய் எல்லாமாய் நீயெங்கும் இருக்கும்மெய் | | நினைவுறுத்து கின்றாயோ நினையறியா தென்புலமை (இறைவா) |
|
|
5. இசைமாணவர் இறைவனை வேண்டல் |
|
'லம்போதரா லகுமிகரா' என்ற மெட்டு |
பண் - (மலகரி) தாளம் - ஈரொற்று |
ப. |
|
து. ப. |
| இன்பே தரும் இசையறிவருள் (அன்பே) |
|