|
தமிழ் ஏத்து |
|
| "ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி | | ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் | | மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது | | தன்னே ரிலாத தமிழ்." |
|
(தண்டியலங்கார வுரைமேற்கோள்) |
1. கடவுள் வணக்கம் (படர்க்கைப் பரவல்) |
|
'பசனை செய்வோம் கண்ணன் நாமம்' என்ற மெட்டு |
இசைந்த பண்ணிற் பாடுக தாளம் - முன்னை |
|
ப. |
| காலையிலே விழித்தெழுவோம் - முதற் | | கடவுளின் அழகிய கழலிணை விழுவோம் | | கைகுவித்தே தொழுவோம் (நாளும்) (காலை) |
|
அ. |
| வேலையில் சிறிதும் வில்லங்கமின்றி | | வினைகளை முறையே நிறைவேற்றி | | மாலையில் நல்ல மனவமைதியுடன் | | மகிழ்ந்து மனைவருவோம் (நாளும்) (காலை) |
|